kl rahul [File Image]
தென்னாப்பரிகாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று செஞ்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பரிகா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் தற்போது முடிந்துள்ளது.
அதன்படி, இந்திய அணி 67.4 ஓவரில் 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில், இந்திய வீரர் கே.எல்.ராகுல் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். ஆரம்பத்தில் இருந்தே தடுமாறி வந்த இந்திய அணியை தன்னுடைய பேட்டிங்கால் தாங்கி பிடித்து கே.எல்.ராகுல் 101 ரன்கள் அடித்தார். இவர் அடித்த இந்த ரன்கள் தான் இந்திய அணிக்கு நல்ல ரன்களை சேர்த்தது. அது மட்டுமின்றி இந்த போட்டியில் சதம் விளாசி கே.எல்.ராகுல் சாதனையையும் படைத்துள்ளார்.
சதம் விளாசிய கே.எல்.ராகுல்.. 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா..!
அது என்ன சாதனை என்றால் செஞ்சுரியனில் அதிகம் சதம் விளாசிய வீரர் என்ற சாதனை தான். இந்த சென்சூரியன் கிரிக்கெட் மைதானத்தில் கே.எல் ராகுலுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய வீரர் விராட் கோலி, ஆஸ்ரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட வீரர்கள் அனைவரும் ஒரு சதம் அடித்து இருந்தார்கள்.
தற்போது அவர்களை மிஞ்சும் அளவிற்கு கே.எல்.ராகுல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இந்திய அணியின் இன்னிங்ஸ் போது சதம் விளாசி சென்சூரியனில் அதிகம் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். சதம் விளாசி சாதனை படைத்த கே.எல்.ராகுலுக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…
சென்னை : உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், அடையாறு நதியை…
சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…
சென்னை : வடகர்நாடக கோவா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை (21-05-2025) 0830…
கோவை : கடந்த மே 17-ம் தேதி கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் ஒரு தாய் யானையும் அதன் குட்டியும்…
மதுரை : மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்து, மதுரை ஐகோர்ட்…