இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை போல மேற்கிந்திய தீவுகளில் சி.பி.எல் எனப்படும் கரீபியன் ப்ரீமியர் லீக் தொடர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் மொத்தம் 6 அணிகள் பங்குபெற்று விளையாடி வருகின்றன. இந்த நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நிர்வாகம் CPL-லில் விளையாடி வரும் st Lucia Zouks அணியை வாங்கியுள்ளது. இந்த அணிக்கு மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர் டேரன் ஷமி கேப்டனாக உள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது. இதுகுறித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி உரிமையாளர்களில் ஒருவரான மோகித் பர்மான் கூறுகையில், உலகின் சிறந்த தொடர்களில் முதலீடு செய்ய ஆவலாக இருப்பதாகவும், சி.பி.எல் தொடர் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
இதற்குமுன் கடந்த 2015ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் சி.பி.எல்லில் இதுவரை மூன்று முறை கோப்பையை வென்றுள்ள (Trinidad and Tobago Red Steel) என்ற அணியை வாங்கியது. அந்த அணி தற்போது Trinbago Knight Riders எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் வாங்கியுள்ள st Lucia Zouks அணியின் உடை மற்றும் பெயர் குறித்த அறிவிப்பு பிசிசிஐயின் அனுமதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…