இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரோஹித் ஷர்மாக்கு ராஜிவ்காந்தி கேல்ரத்னா விருது வழங்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
விளையாட்டுத் துறையில் சிறந்த விளங்குபவர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சார்யா ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி வருவது வழக்கம். அந்தவகையில், இந்த விருதுகளைப் பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதில் இந்திய அணிக்காக சிறப்பான ஆடி, பல சாதனைகள் படைத்த கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாவின் பெயரை தேர்வு செய்வதாக கடந்த சில தினங்களுக்கு முன் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கான பட்டியலில் அவரின் பெயர் இருந்தது.
அவருடன் சேர்ந்து, தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, மகளிா் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா ஆகிய ஐந்து வீரர்களுக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் 29ம் தேதி காணொளி மூலம் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…