இது தான் தோனிக்கு கடைசி ஐபிஎல்லா? காசி விஸ்வநாதன் பதில்!

Published by
பால முருகன்

அடுத்த ஆண்டு (2024) ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் 3 மாதங்கள் இருக்கும் நிலையில், சமீபத்தில் (டிசம்பர் 19 ) ஆம் தேதி மினி ஏலம் துபாயில் நடந்தது. அதில் ஐபிஎல்லில் விளையாடும் அணிகள்  தங்களுக்கு வேண்டிய வீரர்களை ஏலத்தில் வாங்கினர். அதனை தொடர்ந்து தற்போது வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில்  விளையாட தயாராகி வருகிறார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொருத்தவரையில் வழக்கம்போல, அடுத்த ஆண்டும் தோனி தான் கேப்டனாக செயல்படுவார். இந்த தகவல் அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான். இருந்தாலும் ரசிகர்களுடைய கேள்விகளுக்கு பதில் கிடைக்காத ஒரு கேள்வி என்னவென்றால்  என்னவென்றால் தோனியின் ஓய்வு பற்றிதான். ஏனென்றால், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஏற்கனவே ஓய்வுபெற்றுவிட்டார்.

குடும்பத்துக்கு ரொம்ப உதவியா இருக்கும்! சென்னை ஏலத்தில் எடுத்தது குறித்து டேரில் மிட்செல் எமோஷனல்!

ஐபிஎல் போட்டிகளில் மட்டும் தொடர்ச்சியாக விளையாடி கொண்டு இருக்கிறார். எனவே, ரசிகர்கள் பலரும் தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்ற பயத்துடன் தான் இருக்கிறார்கள். தோனியும் தன்னுடைய ஐபிஎல் ஓய்வு குறித்து தெளிவான எந்த பதிலையும் கூறாமல் இருக்கிறார். இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடி விட்டு தோனி ஐபிஎல் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்று விடுவார் என தகவல் சமீபத்தில் வெளியானது.

அந்த தகவல் குறித்து சென்னை அணியின்  தலைமை நிர்வாகி காசி விஸ்வநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது கேள்வியாக கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு பதில் அளித்த அவர்  ” தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்று எனக்கு தெரியாது. இந்த கேள்வி பற்றி கேப்டன் தோனி நேரடியாக உங்களுக்கு பதில் அளிப்பார். அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை பற்றி எங்களிடம் இன்னும் பேசவில்லை.

இந்த ஆண்டு ஜூன் மாத தொடக்கத்தில் தோனிக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை தொடர்ந்து தோனி தற்போது நன்றாக இருக்கிறார். வருகின்ற ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக தயாராகிவிடுவார், இன்னும் 10 நாட்களுக்கு பிறகு ஐபிஎல் போட்டிக்கான வலைப்பயிற்சியை தொடங்குவார்” எனவும் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

13 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

13 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

14 hours ago