இந்தியாவில் உள்ளூர் போட்டியான சையத் முஷ்டாக் அலி தொடர்நடைபெற்று வந்தது. இப்போட்டி இந்தியாவில் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் அணிகள் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடி வந்தனர்.
கடந்த 29-ம் தேதி நடைபெற்ற அரையிறுதி போட்டியில் கர்நாடகா அணியும் , தமிழ்நாடு அணியும் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு சென்றனர்.நேற்று சூரத்தில் உள்ள லாலபாய் கான்ட்ராக்டர் மைதானத்தில் இறுதி போட்டி நடைபெற்றது.
டாஸ் வென்ற தமிழ்நாடு முதலில் பந்து வீச முடிவு செய்தது.இதை தொடந்து முதலில் களமிறங்கிய கர்நாடக அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இருந்து 180 ரன்கள் எடுத்து அதில் அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 60 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.
தமிழக அணி சார்பில் முருகன் அஸ்வின் , ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.இதைத் தொடர்ந்து களமிறங்கிய தமிழக அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 179 ரன்கள் எடுத்தது.இதனால் கர்நாடகா அணி 1 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
தமிழக அணி சார்பில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 44 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். கர்நாடகா அணி சார்பில் ரோனிட் மோர் 2 விக்கெட்டை பறித்தார்.
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து சவரன் ரூ.65,000-ஐ நெருங்கியுள்ளது. கடந்த வாரத்தில் தங்கம்…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : டிராகன் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து மார்க்கெட் எங்கேயோ சென்று விட்டது என்று சொல்லலாம்.அந்த…
டெல்லி : கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றியடைந்து கோப்பையை கைப்பற்றிய நிலையில், அந்த சந்தோசத்தோடு டி20…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
சென்னை : தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் பலரும்…