தமிழ்நாடு அணியை வீழ்த்தி திகில் வெற்றி பெற்ற கர்நாடகா..!

Default Image

இந்தியாவில் உள்ளூர் போட்டியான சையத் முஷ்டாக் அலி தொடர்நடைபெற்று வந்தது. இப்போட்டி இந்தியாவில் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் அணிகள் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடி வந்தனர்.

கடந்த 29-ம் தேதி நடைபெற்ற அரையிறுதி போட்டியில் கர்நாடகா அணியும் , தமிழ்நாடு  அணியும் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு சென்றனர்.நேற்று சூரத்தில் உள்ள லாலபாய் கான்ட்ராக்டர் மைதானத்தில் இறுதி போட்டி நடைபெற்றது.

டாஸ் வென்ற தமிழ்நாடு முதலில் பந்து வீச முடிவு செய்தது.இதை தொடந்து முதலில் களமிறங்கிய கர்நாடக அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இருந்து 180 ரன்கள் எடுத்து அதில் அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 60 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.

தமிழக அணி சார்பில் முருகன் அஸ்வின் , ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.இதைத் தொடர்ந்து களமிறங்கிய தமிழக அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 179 ரன்கள் எடுத்தது.இதனால்  கர்நாடகா அணி 1 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

தமிழக அணி சார்பில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 44 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். கர்நாடகா அணி சார்பில் ரோனிட் மோர் 2 விக்கெட்டை பறித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்