இந்தியா, நியூசிலாந்துக்கு இடையேயான 5, டி20 போட்டிகளில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் டி20 தொடரை வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதையடுத்து இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி ஹாமில்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பின்னர் முதலில் களமிறங்கிய இந்திய அணி 347 ரன்கள் குவித்தது. இதில் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் 88 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இதுவே நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் அடித்த அதிகப்பட்ச ரன்னாகும். இதற்கு முன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 85 ரன்கள் அடித்திருந்தார். அதை தற்போது கே.எல். ராகுல் பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய விக்கெட் கீப்பர்கள் அடித்த அதிகபட்ச ரன்கள், கே.எல்.ராகுல் – 88*, தோனி – 85*,84*,79*,68,56,50 போன்ற ரன்களை அடித்துள்ளனர்.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…