இது தோனியின் சீட்.! இதில் நாங்கள் யாரும் அமர மாட்டோம்.! வைரலாகும் வீடியோ.!

Published by
murugan
  • இந்திய வீரர் சாஹல் நேற்று வீரர்கள் வரும் பேருந்தில் இருந்து வீடியோ ஒன்று வெளியிட்டார்.
  • அந்த வீடீயோவில் பேருந்தின் கடைசி இருக்கைக்கு அருகில் அமர்ந்து , இது தோனியின் சீட். இதில் நாங்கள் யாரும் அமர மாட்டோம். இந்த இடம் அவருக்குரியது அவரை நாங்கள் மிஸ் பன்றோம் என கூறினார்.

தற்போது கோலி தலைமையிலான இந்திய அணி நியூஸிலாந்தில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகின்றனர்.இந்த டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளும் ஆக்லாந்தில் நடைபெற்றது.

விளையாடிய இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றியை பதிவு செய்து உள்ளது.இன்று  மூன்றாவது டி 20 போட்டியில் ஹாமில்டனில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்திய வீரர் சாஹல் நேற்று வீரர்கள் வரும் பேருந்தில் இருந்து வீடியோ ஒன்று வெளியிட்டார்.

அந்த வீடீயோவை பிசிசிஐ வெளியிட்டு உள்ளது.அந்த வீடீயோவில் இந்திய வீரர்கள் பேருந்தில் செல்லும் போது சாஹல் ஒவ்வொரு வீரரிடமும் சென்று பேசிக் கொண்டே வருகிறார். இறுதியில் பேருந்தின் கடைசி இருக்கைக்கு சென்று இது தோனியின் சீட். இதில் நாங்கள் யாரும் அமர மாட்டோம். இந்த இடம் அவருக்குரியது அவரை நாங்கள் மிஸ் பன்றோம் என கூறினார்.இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

வீடியோ இங்க பார்க்க..

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியஅணி அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் மோதி தோல்வியை தழுவி வெளியேறியது. உலகக்கோப்பை போட்டி முடிந்த தோனி ஓய்வு பற்றிய பேச்சுக்கள் தொடங்கியது.

உலகக்கோப்பை போட்டி முடிந்தவுடன் எந்தவித தொடரிலும் தனது பெயரை பரிசீலிக்க வேண்டாம் என கூறியதாக தகவல் வெளியானது.அதற்கேற்ப தோனியும் ராணுவத்தில் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக கூறி மேற்கிந்தியத்தீவுகள் விளையாடாமல்  ராணுவ பயிற்சியில் ஈடுபட்டார். அதன்பின்னர் இந்திய அணி விளையாடிய இந்த வித தொடர்களிலும் அவர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான வீரர்களின் பிசிசிஐ ஒப்பந்த பட்டியலிலும் தோனி பெயர் இல்லை. இதனால் தோனி இனிமேல் இந்திய அணியில் விளையாடுவாரா..? என்ற கேள்வி  ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 

 

Published by
murugan

Recent Posts

அரைக்கம்பத்தில் தேசியக்கொடி! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது! – தமிழக அரசு.

அரைக்கம்பத்தில் தேசியக்கொடி! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது! – தமிழக அரசு.

சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ்  கடந்த…

47 seconds ago

CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…

1 hour ago

இபிஎஸ் தலைமையில் மா.செ கூட்டம்.! முதல் வரிசையில் செங்கோட்டையன்!

சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…

2 hours ago

இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! மோப்பநாய் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரம்…

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…

2 hours ago

“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

3 hours ago

பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…

3 hours ago