இது நல்ல முடிவு… தோனியின் 7ம் நம்பருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது குறித்து ராஜீவ் சுக்லா கருத்து!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்திய கிரிக்கெட்டுக்கு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி செய்துள்ள மிகப்பெரிய பங்களிப்பை கெளரவிக்கும் வகையில், அவரது ஜெர்சி நம்பர் 7-க்கு ஓய்வு அளித்து இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அறிவித்திருந்தது. இந்திய கிரிக்கெட் வாரியம் 2004ல் தோனி அறிமுகமானதில் இருந்து விளையாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பிற்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எம்எஸ் தோனி ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவரது ஜெர்சி நம்பர் 7க்கும் ஓய்வு அளிக்கவேண்டும் என்றும் அதுதான் வருக்கு செலுத்தும் மரியாதையை எனவும் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட பலர் வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது பிசிசிஐ நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு, முன்னாள் வீரர்கள் இன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

நம்பர் 7க்கு ஓய்வு… எம்.எஸ் தோனியை கெளரவித்த பிசிசிஐ!

இந்த நிலையில், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஜெர்சி நம்பர் 7க்கு ஓய்வு அளிக்கப்பட்டது குறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியதாவது, தோனியின் ஜெர்சி நம்பர் 7க்கு ஓய்வு அளிக்கப்பட்டது என்பது ஒரு நல்ல முடிவு. இந்திய கிரிக்கெட்டுக்கு தோனியின் இணையற்ற பங்களிப்புகளுக்கு இது ஒரு சான்றாகும். இந்தியா கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களில் அவரும் ஒருவர்.

எனவே, பிசிசிஐயின் இந்த முடிவுஎன்பது  எம்எஸ் தோனி இந்திய கிரிக்கெட்டுக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக அவருக்குக் கிடைத்த மரியாதையாகும். உலக கிரிக்கெட்டிற்கும் இந்திய கிரிக்கெட்டிற்கும் மகத்தான பங்களிப்பை செய்துள்ளார். இதன்மூலம் ஜெர்சி நம்பர் 7-ஐ இந்திய வீரர், வீராங்கனைகள் யாரும் பயன்படுத்த முடியாது. அனைத்து வகை கோப்பைகளை வென்ற முன்னாள் இந்திய கேப்டனான எம்எஸ் தோனி, தனது 15 ஆண்டுகால வாழ்க்கையில் கிரிக்கெட் உலகில் அழியாத முத்திரையை பதித்துள்ளார்  என தெரிவித்தார்.

Recent Posts

தவெக பூத் கமிட்டி: கடும் வெயிலில் நிற்கும் தொண்டர்கள்.., பாஸ் இருப்போருக்கு மட்டும் அனுமதி.!

கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…

48 minutes ago

‘சச்செட்’ செயலி என்றால் என்ன? மன் கி பாத்தில் பிரதமர் மோடி இதை குறிப்பிட்டது ஏன்.?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…

1 hour ago

“பஹல்காம் தாக்குதல்… ரத்தம் கொதிக்கிறது” – பிரதமர் மோடி ஆவேசம்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…

1 hour ago

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: 10 பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு.!

காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…

3 hours ago

கஞ்சா வைத்திருந்த மலையாள இயக்குநர்கள் 2 பேர் கைது.!

கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…

4 hours ago

‘விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவையும் நான் மூடினேன்’ – திருமாவளவன்.!

திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…

4 hours ago