ஐஎஸ்எல் கால்பந்து : பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை.!

Default Image

6வது சீசன் இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் லீக் சுற்று மற்றும் அரையிறுதி போட்டி முடிவடைந்த நிலையில், வரும் 14ம் தேதி இறுதிப்போட்டி கோவாவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன. இந்த நிலையில் இப்போட்டி பார்வையாளர்கள் இன்றி நடைபெறும் என்று தகவல் வெளியுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

இதனால் பொதுஇடங்களில் கூட்டம் கூடுவது தவிர்க்க வேண்டும் என்று பல நாடுகளில் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே சீனாவில் தொடங்கி தற்போது இந்தியாவில் பரவியுள்ள கொரோனாவால் இதுவரை 73 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவு காரணமாக இந்தியாவில் பல நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகள் நடத்த கூடாது என்று பலவேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மத்திய அரசு அனைத்து விசாவையும் ஏப்ரல் 15ம் தேதி வரை தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க ஐ.எஸ்.எல் இறுதி போட்டியில் பார்வையாளர்கள் இன்றி நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்