ISL கால்பந்து தொடர்- டிராவில் முடிந்தது சென்னையின் எப்சி vs ஒடிசா எப்சி..!

Default Image

சென்னையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை மற்றும் ஒடிசா அணிகளுக்கு இடையிலான போட்டி சமனில் முடிந்தது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) 6-வது சீசனியில் 10 அணிகள் கொண்டு பல்வேறு நகரங்களியில் நடந்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு நேரு மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி ஒடிசா எப்.சி. அணிகள் மோதின.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் 0-0 என சமனிலை வகித்தது. இரண்டாவது பாதியில் 51 மற்றும் 71-வது நிமிடங்களில் நெரிஜஸ் வல்ஸ்கிஸ் சிறப்பாக தலா ஒரு கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒடிசா அணியின் அரிடேன் 54-வது நிமிடத்திலும், சிஸ்கோ 82-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
இதனால் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என சமனில் முடிந்தது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
சென்னை அணி விளையாடிய 6 போட்டிகளில் ஒரு வெற்றி, 3 தோல்வி, 2 சமன் என 5 புள்ளிகள் பெற்றுள்ளது. ஒடிசா அணி விளையாடிய 6 போட்டிகளில் ஒரு வெற்றி, 2 தோல்வி, 3 சமன் என 6 புள்ளிகள் பெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்