நாளைய போட்டியில் இருந்து விலகிய அனுபவ வீரர் இஷாந்த் சர்மா..!

Default Image
  • நியூசிலாந்துக்கு எதிராக நாளை இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.
  • இஷாந்த் ஷர்மா காயம் காரணமாக  விலகி உள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிராக நாளை இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்த இரண்டாவது போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா விலகி உள்ளார்.அனுபவ வீரர் இஷாந்த் ஷர்மா கணுக்கால் காயத்திலிருந்து மீண்டு நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடினார்.

இஷாந்த் சர்மா முதல் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில் மீண்டும் வலி ஏற்பட்டதால் இரண்டாவது போட்டியில் விளையாட மாட்டார்  என அறிவிக்கப்பட்டு உள்ளது. இவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் இன்று இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது உமேஷ் யாதவும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இதனால் நாளை போட்டிகள் இஷாந்த் சர்மாவிற்கு பதில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்