சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டி – 3 தங்கப் பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீரர்!

Default Image

சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீரர் பெங்களூரு சிறுவன்.

இந்த ஆண்டு ஜூலை 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் நார்வேயின் ஆஸ்லோவில் நடைபெற்ற சர்வதேச கணித ஒலிம்பியாட் (IMO) போட்டியில் பெங்களூருவைச் சேர்ந்த 18 வயது சிறுவன் பிரஞ்சல் ஸ்ரீவஸ்தவா தங்க பதக்கத்தை வென்றார். இதன் மூலம் சர்வதேச கணித ஒலிம்பியாட் (IMO) போட்டியில் தொடர்ந்து மூன்று தங்கப் பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இந்த ஆண்டுக்கான ஒலிம்பியாட் போட்டியில் பிரஞ்சால் மொத்தம் 34 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றார். இதற்கு முன், 2019ல் 35 ரன்களும், 2021ல் 31 ரன்களும் எடுத்து தங்கப் பதக்கம் வென்றார். மேலும், ஐஎம்ஓவின் ( IMO) 63 ஆண்டுகால வரலாற்றில் 11 பேர் மட்டுமே அவரை விட அதிக பதக்கங்களை வென்றுள்ளதால், பிரஞ்சல் ஸ்ரீவஸ்தவாவின் பெயர் சர்வதேச தகவல் ஒலிம்பியாட் ஹால்-ஆஃப்-பேமில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்