INDvsWI: வெஸ்ட் இண்டீஸ் அணியை வதம் செய்து தொடரை கைப்பற்றிய இந்திய அணி ..!

Published by
murugan
  • முதலில் இறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து  240 ரன்கள் குவித்தனர்.
  • பின்னர் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் பறிகொடுத்து  173 ரன்கள் எடுத்து  67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து  வெஸ்ட் இண்டீஸ் அணி  டி 20 போட்டியில் விளையாடி வருகிறது. இன்று மும்பையில் நடைபெற்ற கடைசி போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா ,கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் இருவருமே  அதிரடி ஆட்டத்தால்  அரை சதம் விளாசினார்.

135 ரன்கள் வரை ஒரு விக்கெட் இழக்காமல் விளையாடி வந்த போது ரோஹித் 71 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனையடுத்து களமிறங்கிய பண்ட் 2 பந்துகளில் ஒரு ரன் கூட  எடுக்காமல் விக்கெட்டை இழந்தார். பின்னர் கே.எல் ராகுல் ,கேப்டன் விராட் கோலி  இருவரும் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதில்அதிரடியாக விளையாடிய  கேப்டன் கோலி20 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதன் பின் ராகுல் சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 91 ரன்னில் வெளியேற இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து  240 ரன்கள் குவித்தனர்.

இதில் அதிகபட்சமாக ராகுல் 91 ரன்கள் அடித்தார். பின்னர் 241 ரன்கள் என்ற இலக்குடன் களமிங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 4 ஓவருக்குள் 17 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது.

இதை தொடர்ந்து ஹெட்மயேர் ,கீரோன் பொல்லார்ட் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி சரிவில் இருந்த அணியை மீட்டு கொண்டு வந்தனர்.சிறப்பாக விளையாடி வந்த ஹெட்மயேர்அரைசதம் அடிக்காமல் விக்கெட்டை 41 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

பின்னர் அணியின் கேப்டன் கீரோன் பொல்லார்ட் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்தை சிஸேர்களாக பறக்கவிட்டார்.அதிரடியாக விலையாடிய பொல்லார்ட் புவனேஷ்குமார் வீசிய பந்தை சிக்ஸர் அடிக்க முயற்சி செய்த போது பவுண்டரி லைனில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

பின்னர் இறங்கிய அனைத்து வீரர்களும் நிலைத்து நிற்கவில்லை இறுதியாக இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை பறிகொடுத்து 173 ரன்கள் எடுத்து  67 வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.இதனால் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

Published by
murugan

Recent Posts

திருவள்ளூர் மக்கள் கவனத்திற்கு.., முதலமைச்சர் வெளியிட்ட டாப் 5 அறிவிப்புகள் இதோ…

திருவள்ளூர் மக்கள் கவனத்திற்கு.., முதலமைச்சர் வெளியிட்ட டாப் 5 அறிவிப்புகள் இதோ…

திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…

30 minutes ago

எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!

ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…

1 hour ago

நடிகர் ஸ்ரீ உடல்நிலை எப்படி இருக்கு? லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அறிக்கை!

சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…

2 hours ago

Live : புனித வெள்ளி தினம் முதல்.., உள்ளூர், உலக அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…

4 hours ago

அந்த 300 ரன்கள் எங்கப்பா? வாய்விட்ட முன்னாள் SRH பயிற்சியாளர்! வறுத்தெடுக்கும் ஐபிஎல் ரசிகர்கள்!

மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

5 hours ago

அதிமுக – பாஜக கூட்டணி : “இனி யாரும் பேசாதீங்க..,” கட்சி நிர்வாகிகளுக்கு கடிவாளம் போட்ட இபிஎஸ்?

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…

6 hours ago