INDvsWI:காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து புவனேஷ்வர்குமார் விலகல்.!

Default Image
  • கடந்த புதன்கிழமை நடந்த கடைசி டி 20 போட்டியில் காயம் ஏற்பட்டு உள்ளது.
  • இதனால் ஒருநாள் தொடரில் இருந்து புவனேஷ்வர்குமார் விலகியதை தொடர்ந்து இவருக்கு பதிலாக இந்திய அணியில் ஷர்தல் தாக்கூர் சேர்க்கப்பட்டு உள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் நாளை முதல் தொடங்க உள்ளது.முதல் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாடிய போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

ஒருநாள் தொடரையும் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி உள்ளது. முதல் போட்டிக்காக இந்திய அணி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய பயிற்சியில் புவனேஷ்வர்குமார் கலந்து கொள்ளவில்லை.இவருக்கு கடந்த புதன்கிழமை நடந்த கடைசி டி 20 போட்டியில் காயம் ஏற்பட்டு உள்ளது.அந்த காயம் சரியாகாத நிலையில் புவனேஸ்குமார் ஒருநாள் தொடரில் இருந்து விலகி உள்ளார்.

ஒருநாள் தொடரில் இருந்து புவனேஷ்வர்குமார் விலகியதை தொடர்ந்து இவருக்கு பதிலாக இந்திய அணியில் ஷர்தல் தாக்கூர் சேர்க்கப்பட்டு உள்ளார்.இது தொடர்பான அறிவிப்பை பிசிசிஐ அறிவித்து உள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்