INDvsSA:மழையால் போட்டி தற்காலிகமாக நிறுத்தம்…!

Default Image

இந்தியா ,தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று  ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் இந்திய அணி களமிறங்கியது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் , ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே மயங்க் அகர்வால் 12 ரன் எடுத்து வெளியேற அடுத்து இறங்கிய புஜாரா டக் அவுட் ஆனார்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி  12 ரன்களுடன் வெளியேறினார்.முக்கிய மூன்று விக்கெட்டை இழந்து தடுமாறி விளையாடி வந்த நிலையில் தொடக்க வீரரான ரோஹித் சர்மா, ரஹானே இருவரும் கூட்டணியில் இணைந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா சதமும் , ரஹானே அரைசதம் அடித்தனர். இந்நிலையில் போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.களத்தில் ரோகித் சர்மா 117 , ரஹானே  83 எடுத்து களத்தில் உள்ளனர். இந்திய அணி 58 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 224 ரன்கள் எடுத்து உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்