இந்தியா , தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடைபெறுகிறது.இதில் முதல் போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் தொடங்கியது.இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் இந்திய அணி பேட்டிங் தொடங்கியது.
தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர். நேற்றைய ஆட்ட முடிவில் இந்திய அணி 59.1 ஓவர் முடிவில் விக்கெட்டை பறிகொடுக்காமல் 202 ரன்கள் அடித்து இருந்த போது மழை குறுக்கிட்டதால் நேற்றைய போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
களத்தில் ரோகித் 115 , அகர்வால் 84 ரன்களுடன் இருந்தனர். இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது.நேற்றைய ஆட்டம் போல சிறப்பாக விளையாடி வந்த அகர்வால் 212 பந்தில் 102 ரன்கள் அடித்து டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். களத்தில் தற்போது களத்தில் ரோஹித் 166 , அகர்வால் 130 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.
இந்திய அணி ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் 79 ஓவர் முடிவில் 299 ரன்கள் அடித்து உள்ளது.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…