இன்று இந்தியா ,நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டி பே ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் ரோகித் சர்மா அணியை கேப்டனாக வழி நடத்தி வருகிறார்.
இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் குவித்தனர். நியூஸிலாந்து அணியில் ஸ்காட் 2 விக்கெட்டை பறித்தார்.164 ரன்கள் இலங்குடன் களமிறங்கவுள்ளது.
இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல் ,சஞ்சு சாம்சன் இருவரும் இறங்கினர். 4-வது போட்டியை போல இந்த போட்டியிலும் சஞ்சு சாம்சன் ஆட்டம் தொடக்கத்திலே விக்கெட்டை இழந்து வெளியேறினார். சஞ்சு சாம்சன் 4-வது போட்டியில் 8 ரன் எடுத்து வெளியேறினார். இப்போட்டியில் 2 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் கேப்டன் ரோஹித் சர்மா களமிறங்கினர்.இதையெடுத்து கே.எல் ராகுல் , ரோஹித் சர்மா கூட்டணியில் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.அதிரடியாக இருவரும் விளையாடினர். சிறப்பாக விளையாடிய கே.எல் ராகுல் அரைசதம் எட்டாமல் 45 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
அடுத்த வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினர்.அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா அரைசதம் விளாசினார்.அடுத்த சிலநிமிடங்களில் ரோஹித் சர்மாவிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக 60* ரன்னில் வெளியேறினர்.பின்னர் இறங்கிய சிவம் துபே 5 ரன்னில் வெளியேறினார். சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 33* ரன்கள் அடித்தார்.இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் குவித்தனர்.
ஆப்கானிஸ்தான் : அணியில் பந்துவீச்சில் தூண் என்றால் லெக்-ஸ்பின்னர் ரஷித் கான் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அணியின் வளர்ச்சிக்கு…
சென்னை : மும்மொழிக் கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் "பெரியார், அண்ணா, கலைஞர்…
சென்னை : தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் மாய்ந்த திருமலர், திருமஞ்சு, செண்பகம் ஆகியோரின்…
சென்னை : ஒவ்வொரு நடிகருக்கும் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மிகப்பெரிய ஹிட் படங்களாக ஒரு படம் இருக்கும் என்பது…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் (EU) அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார். அதிகமாக,…
லாகூர் : நடந்து கொண்டு இருக்கும் இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது ரசிகர்களுக்கும் அணி…