INDvsBAN : ரோஹித் சர்மா பிடித்த அசால்ட் கேட்ச்! ஷாக்கில் உறைந்த வங்கதேச பேட்ஸ்மேன்!

நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா பிடித்த அட்டகாசமான கேட்சை பார்த்து கோலியும், சிராஜும் வியப்பில் ஆழ்ந்தனர்.

Rohit Sharma Catch

கான்பூர் : இந்திய மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டம் இன்று கான்பூரில் நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களாக மழையால் தடைபட்டிருந்த இந்த ஆட்டம் இன்று மீண்டும் தொடங்கியது. இந்த நாளின் முதல் ஷெசனானது தற்போது முடிவடைந்துள்ளது.

இந்த முதல் ஷெசனில் 31 ஓவர்களில், 98 ரன்கள், 3 விக்கெட்டுகள் என விறுவிறுப்பாகவே முடிவடைந்துள்ளது. இதனால், இந்த செஷனில் எந்த ஒரு அணியும் ஆதிக்கம் செலுத்தாமல், சமமாகவே முடிந்துள்ளது. இந்த செக்ஷனில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா ஒரு அட்டகாசமான கேட்சை பிடித்து ரசிகர்களை இன்ப அதிரிச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

இந்த முதல் ஷெசனில் தட்டி தட்டி விளையாடி கொண்டிருந்த லிட்டன் தாஸ் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சிராஜ் வீசிய பந்தை ஏறி அடிப்பார். அப்போது, 30-யார்டு வட்டத்திற்குள் நேராக ஃபீல்டிங் நின்று கொண்டிருந்த ரோஹித் சர்மா, சரியான நேரத்தில் குதித்து ஒற்றை கையால் அந்த பந்தை கேட்ச் பிடித்திருப்பார்.

அந்த கேட்சை பார்த்த சக வீரர்களான விராட் கோலி, பந்து வீசிய முகமது சிராஜ் மற்றும் ரசிகர்கள் உட்பட பலரும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். மேலும், அந்த ஷாட்டை அடித்த லிட்டன் தாஸ் ஷாக்கில் உறைந்துவிடுவார். அதனை தொடர்ந்து சிறிய இடைவெளியில் ஷகிப்- அல் ஹசன் அஸ்வின் பந்து வீச்சில் வானை நோக்கி ஒரு ஷாட்டை அடிப்பார்.

அதை ஓடி சென்று சிராஜ் ஒற்றை கையால் கேட்ச் பிடித்து அசத்தினார். இந்த இருவரின் கேட்ச் பிடித்த இந்த வீடியோக்களை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வைரல் செய்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்