இந்திய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட தயாராகி வருகிறது. இதில் முதல் டி20 கிரிக்கெட் போட்டி வரும் ஜனவரி 11-ஆம் தேதி பஞ்சாபில் உள்ள மொஹாலி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த டி20 தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுகிறார்.
போட்டி தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இரண்டு அணி வீரர்களும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையில், இந்த போட்டியில் விளையாடும் வீரர்கள் குறித்தும் பல முன்னாள் கிரிக்கெட் பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சூர்யகுமார் யாதவுக்கு அறுவை சிகிச்சை? இந்த ஐபிஎல்லில் விளையாடுவது சந்தேகம்?
அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் கிரண் மோர் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித்துடன் ஜெய்ஸ்வால் இறங்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” என்னை பொறுத்தவரையில் இந்த டி20 தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தான் ரோஹித் ஷர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக இறங்கவேண்டும்.
ஏனென்றால், இடது-வலது கலவை என்பதனை தாண்டி ஜெய்ஸ்வால் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை விளாசுவார். எனவே, அவர் தொடக்க ஆட்டக்காரராக இறங்கினால் சரியாக இருக்கும். அதே சமயம் நான் சுப்மன் கில்லை குறை சொல்லவில்லை. ஆனால் நான் டி20 வடிவத்தில் இடது மற்றும் வலது கை பேட்டிங் கலவையுடன் விளையாடினாள் நன்றாக இருக்கும் என்று தான் சொல்ல வருகிறேன். எனவே, இந்த கலவையின் படி இந்தியா இறங்கினால் நன்றாக இருக்கும் எனவும் கிரண் மோர் கூறியுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…