இந்தியாவின் மூத்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான சந்திரா தோமர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தியாவின் மூத்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை, சந்திரா தோமர். 89 வயதாகும் இவர், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட்டில் வசித்து வந்தார். சந்திரா தோமர், தனது 60 வயதிற்கு மேல்தான் முதல்முறையாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்றார். முதியோருக்கான தேசிய அளவிலான பல போட்டிகளில் வெற்றி பெற்று, பலரின் கவனத்தை ஈர்த்தார்.
இவருக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து மீரட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சந்திரா தோமர் உயிரிழந்ததற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…