டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் ரவிக்குமார்,தீபக் புனியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்கள்.
இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் மல்யுத்தம் காலிறுதிப் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் தஹியா ,பல்கேரியாவின் வாலண்டினோ வாங்கேலோவை எதிர்கொண்டார். இப்போட்டியின் தொடக்கம் முதலே ரவிக்குமார் முன்னிலை வகித்து வந்தார்.அதன்படி,போட்டியின் இறுதியில்,ரவிக்குமார் 14-4 என்ற கணக்கில் பல்கேரிய வீரரை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
அதேபோல,மல்யுத்தம் காலிறுதிப் போட்டியில் 86 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் தீபக் புனியா,சீன வீரர் லின் சூசனை 6-3 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இவர் முன்னதாக இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நைஜீரிய வீரர் அகியோமோரை 12-1 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம்,இருவரும் ஒலிம்பிக் பதக்கத்தை பெற்று தரும் நம்பிக்கையை தற்போது இந்தியாவுக்கு அளித்துள்ளனர்.
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…
கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணியில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது.…