டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் ரவிக்குமார்,தீபக் புனியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்கள்.
இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் மல்யுத்தம் காலிறுதிப் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் தஹியா ,பல்கேரியாவின் வாலண்டினோ வாங்கேலோவை எதிர்கொண்டார். இப்போட்டியின் தொடக்கம் முதலே ரவிக்குமார் முன்னிலை வகித்து வந்தார்.அதன்படி,போட்டியின் இறுதியில்,ரவிக்குமார் 14-4 என்ற கணக்கில் பல்கேரிய வீரரை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
அதேபோல,மல்யுத்தம் காலிறுதிப் போட்டியில் 86 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் தீபக் புனியா,சீன வீரர் லின் சூசனை 6-3 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இவர் முன்னதாக இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நைஜீரிய வீரர் அகியோமோரை 12-1 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம்,இருவரும் ஒலிம்பிக் பதக்கத்தை பெற்று தரும் நம்பிக்கையை தற்போது இந்தியாவுக்கு அளித்துள்ளனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…