ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை 69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் லவ்லினா வெற்றி பெற்றுள்ளார்.
இன்று நடைபெற்ற ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை 69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன்,ஜெர்மனி வீராங்கனை நாடின் அபெட்ஷை எதிர்கொண்டார்.
முன்னிலை:
ஆட்டத்தின் தொடக்கம் முதலே லவ்லினா தனது திறமையை வெளிப்படுத்தி,முதல் பாதியில் 10 – 9 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார்.இதனையடுத்து, இரண்டாவது பாதியிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய வீராங்கனை லவ்லினா,மீண்டும் 10 – 9 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார்.
வெற்றி:
இறுதியில்,இந்திய வீராங்கனை லவ்லினா 3-2 என்ற கணக்கில்,ஜெர்மனி வீராங்கனை நாடின் அபெட்ஷை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். இதனால்,காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.எனவே,இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம் கிடைக்க வாய்ப்பு இருக்கும் என நம்பிக்கை எழுந்துள்ளது.போர்கோஹெய்ன் இரண்டு முறை உலக மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றவர்.
அதேபோல,35 வயதான அபெட்ஷ் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டிக்கு தகுதி பெற்ற முதல் ஜெர்மன் வீராங்கனை மற்றும் இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்றவர் மற்றும் முன்னாள் ஐரோப்பிய சாம்பியன் ஆவார்.
இதற்கு முன்னதாக,இன்று நடைபெற்ற ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…