ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை 69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் லவ்லினா வெற்றி பெற்றுள்ளார்.
இன்று நடைபெற்ற ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை 69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன்,ஜெர்மனி வீராங்கனை நாடின் அபெட்ஷை எதிர்கொண்டார்.
முன்னிலை:
ஆட்டத்தின் தொடக்கம் முதலே லவ்லினா தனது திறமையை வெளிப்படுத்தி,முதல் பாதியில் 10 – 9 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார்.இதனையடுத்து, இரண்டாவது பாதியிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய வீராங்கனை லவ்லினா,மீண்டும் 10 – 9 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார்.
வெற்றி:
இறுதியில்,இந்திய வீராங்கனை லவ்லினா 3-2 என்ற கணக்கில்,ஜெர்மனி வீராங்கனை நாடின் அபெட்ஷை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். இதனால்,காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.எனவே,இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம் கிடைக்க வாய்ப்பு இருக்கும் என நம்பிக்கை எழுந்துள்ளது.போர்கோஹெய்ன் இரண்டு முறை உலக மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றவர்.
அதேபோல,35 வயதான அபெட்ஷ் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டிக்கு தகுதி பெற்ற முதல் ஜெர்மன் வீராங்கனை மற்றும் இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்றவர் மற்றும் முன்னாள் ஐரோப்பிய சாம்பியன் ஆவார்.
இதற்கு முன்னதாக,இன்று நடைபெற்ற ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கர் : நடந்து முடிந்த சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர், ஓய்வு பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்களை மீண்டும்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான நேர்காணலில், "இந்தியாவா? பாகிஸ்தானா?…
சென்னை : தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கையை 15-ஆம் தேதியும் தாக்கல்…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு அரசின் பொது…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…