டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் சூப்பர் ஹெவிவெயிட் குத்துச்சண்டை வீரர் சதீஷ் குமார் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை சூப்பர் ஹெவி வெயிட் போட்டியின் 91 கிலோவுக்கு மேல் உள்ள எடை பிரிவின், 16 வது சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றன.
இப்போட்டியில் இந்திய வீரர் சதீஷ் குமார் ஜமைக்காவின் ரிகார்டோ பிரௌனை எதிர்கொண்டார்.முதல் ரவுண்டில் ஐந்து நடுவர்களிடமும் சதீஷ் குமார் தலா 10 புள்ளிகள் பெற்றார்.இதனையடுத்து,2-வது மற்றும் 3-வது சுற்றுகளில் 3-வது நடுவர் தலா 9 புள்ளிகள் வழங்கினார்.
இறுதியில்,சதீஷ் குமார் 4-1 (30-27, 30-27, 28-29, 30-27, 30-26) என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.இதனால்,ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று நடைபெறும் காலிறுதியில் உஸ்பெகிஸ்தான் வீரர் பகோதிர் ஜாலோலோவை எதிர்கொள்ளவுள்ளார்.
முதல் குத்துச்சண்டை வீரர்:
31 வயதான ஜமைக்காவின் பிரௌன், 1996 முதல் தனது நாட்டிலிருந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் குத்துச்சண்டை வீரர் ஆவார்.
அதேபோல,சூப்பர் ஹெவிவெயிட் பிரிவில் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய குத்துச்சண்டை வீரர் சதீஸ் குமார் ஆவார்.இவர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் பதக்க வாய்ப்பை மிகக் குறைந்த புள்ளிகளில் இழந்து விட்டார்.இருப்பினும்,டோக்கியோ 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் தகுதிப் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தை பெற்றார்.
விருது:
சதீஸ் குமாருக்கு,2018 ஆம் ஆண்டு மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி கௌரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…