உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் : தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்று சாதனை

Default Image

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்றார்.

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி  பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்து வருகிறது. தமிழகத்தை சேர்ந்த இளவேனில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் கலந்துக் கொண்டார்.

10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இறுதிப்போட்டியில் 251.7 புள்ளிகள் எடுத்து ,தங்கம் வென்றுள்ளார் இளவேனில் . இதுவரை இந்தியாவைச் சேர்ந்த அபுர்வி சண்டேலா மற்றும் அஞ்சலி பகவத் ஆகியோர் மட்டுமே உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டிகளில்  தங்கம் வென்றுள்ள நிலையில் தற்போது உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற 3வது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்  இளவேனில் வளரிவான்

மேலும் இவர் கடந்த ஆண்டு ஜூனியர் உலகக் கோப்பையில் தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
chandrababu naidu
ChandrababuNaidu
IND VS NZ CT 2025
mookuthi amman 2
sunil gavaskar rohit sharma
Actor Abhinay