Indian Womens Archery Team [file image]
பாரிஸ் ஒலிம்பிக் : பிரான்ஸின் பாரிஸ் நகரில் உள்ள லெஸ் இன்வாலிடெஸ் கார்டனில் வில்வித்தை போட்டிக்கான ரேங்கிங் சுற்று தொடங்கியுள்ளது.
உலகநாடுகள் பங்கேற்று நாளை தொடங்கவிருக்கும் மாபெரும் விளையாட்டு தொடரில் நடைபெறும் வில்வித்தை போட்டி தகுதி சுற்று நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் தனிநபர் ரேங்கிங் சுற்றில் இந்திய அணி சார்பாக கலந்து கொண்ட பஜன் கவுர் 11 இடமும், அங்கிதா பகத் 22 இடமும் மற்றும் தீபிகா குமாரி 23வது இடமும் பிடித்துள்ளனர்.
இதனால், புள்ளிகளின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக இந்திய மகளிர் அணி 4-ஆம் இடம் பிடித்து காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெற்று அசத்தி இருக்கிறது. நடைபெற்ற இந்த வில்வித்தை போட்டியில், மொத்தம் 2 பாதிகளாக தனிநபர் ரேங்கிங் சுற்றில் ஒவ்வொரு போட்டியாளரும் சுமார் 72 முறை அம்புகளை எய்தனர். இதில் ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் போட்டித் தரவரிசை எண் வழங்கப்பட்டது.
அதன்படி மகளிர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா பகத் 666 புள்ளிகளில் 11-ம் இடம் பிடித்தார், அவரை தொடர்ந்து பஜன் கவுர் 659 ஸ்கோருடன் 22-ம் இடம் பிடித்தார், தீபிகா குமாரி 658 ஸ்கோருடன் 23-ம் இடம் பிடித்தார். இதனால் தனிநபர் ரேங்கிங் சுற்றில் இந்திய அணி ஒட்டு மொத்தமாக பெற்ற 1983 புள்ளிகள் பெற்றுள்ளது.
இதன் காரணமாக மொத்தமாக புள்ளிப்பட்டியல் ரேகிங் அடிப்படையில் 4-ஆம் இடம் பிடித்து அசத்தியது, இதனால் நேரடியாக காலிறுதிக்கு சுற்றுக்கும் தகுதி அடைந்துள்ளது. மேலும், கொரியா, சீனா மற்றும் மெக்சிக்கோ ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களை மகளிர் பிரிவில் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வில்வித்தையில் தனி நபருக்கான ரவுண்ட் ஆஃப் சுற்று வரும் ஜூலை 30-ம் தேதி முதல் தொடங்குகிறது. அதே நேரம் மகளிர் அணிக்கான நாக்-அவுட் போட்டி 28-ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த இரண்டிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக காலிறுதி சுற்றுக்கு முன்னேறுவார்கள் அதிலும் 5 முதல் 12 வரையிலான இடங்களை பிடிக்கும் அணிகள் ரவுண்ட் ஆஃப் 16-ல் சுற்றில் விளையாடி தகுதி பெறுவார்கள்.
பாங்காக் : மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் நிலநடுக்கத்தால்…
சென்னை : தமிழ்நாட்டில் இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. அதற்குள் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யாராக இருப்பார்கள்…
அகமதாபாத் : குஜராத் டைட்டன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் 2022-ல் தொடங்கப்பட்ட உடன் குஜராத் அணிக்கு கேப்டனாக…
சேலம் : நேற்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில் தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு…
சென்னை : நேற்று மியான்மர், தாய்லாந்து, பாங்காங்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்து பாதிப்புள்ளாகியுள்ளன. இதில் மியான்மர்…