ஆஸ்திரேலியா & பாகிஸ்தான் சாதனையை சமன் செய்த இந்திய அணி..!

Published by
murugan

இந்தியா,பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 14-ம் தேதி தொடங்கி நேற்று முடிந்தது.இப்போட்டி இந்தூரில் நடைபெற்றது.முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பான பந்துவீச்சால் இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம்  இந்திய அணி தொடர்ந்து மூன்று டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய &பாகிஸ்தான் அணியின் சாதனையை சமன் செய்து உள்ளது.
இந்திய அணி இந்த வருடம் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக புனேவில் இன்னிங்ஸ் மற்றும்137 ரன்கள், ராஞ்சியில்  இன்னிங்ஸ் & 202 ரன்கள் வித்தியாசத்தில் என இரண்டு முறை வெற்றி பெற்றது.இதை தொடர்ந்து நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிராக இன்னிங்ஸ் & 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி கடந்த 1930 மற்றும் 31-ம் ஆண்டு தொடர்ந்து மூன்று முறை இன்னிங்ஸ் மற்றும் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. அதன் பிறகு பாகிஸ்தான் அணி கடந்த 2001 மற்றும் 02- இதே சாதனையை படைத்தது.
இதை தொடர்ந்து தற்போது இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் & 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரு அணியின் சாதனையை சமன் செய்து உள்ளது.

Published by
murugan

Recent Posts

பல்வேறு திட்டங்களை திறந்து வைக்க இன்று நெல்லை செல்கிறார் மு.க.ஸ்டாலின்.!

பல்வேறு திட்டங்களை திறந்து வைக்க இன்று நெல்லை செல்கிறார் மு.க.ஸ்டாலின்.!

நெல்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று திருநெல்வேலிக்கு செல்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்…

11 minutes ago

டெல்லியில் வெற்றி பெறுமா பாஜக? வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு!

டெல்லி :  மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே…

11 hours ago

INDvENG : அணியை அறிவித்த இங்கிலாந்து! 15 மாதங்களுக்கு பிறகு களமிறங்கும் ஜோ ரூட்!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை முதல்…

12 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!

டெல்லி :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத்…

13 hours ago

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை : “இக்கொடுரமானச் செயலுக்கு திமுக தான் பொறுப்பு” – இபிஎஸ் காட்டம்!

கிருஷ்ணகிரி : மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள்…

14 hours ago

பழைய ‘கிங்’ கோலியாக மீண்டு(ம்) வாங்க., ஐடியா கொடுத்த அஸ்வின்!

நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3…

15 hours ago