இன்று இந்திய அணி அறிவிப்பு..! மீண்டும் வருவாரா தோனி..!எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ..!

Default Image

இந்திய அணி தற்போது பங்களாதேஷ் அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.இதற்கு முன் இந்திய அணி விளையாடிய டி 20 தொடரில் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
நாளை இந்திய அணி கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர்.முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.இந்நிலையில் அடுத்தமாதம் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்திய அணி 3 டி 20மற்றும் ஒரு அநாள்  போட்டியில் விளையாட உள்ளனர்.
இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு இன்று அறிவிக்கப்பட உள்ளது.இந்த தொடரில் அதிக போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வரும் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அவருக்கு பதிலாக தற்போது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் மயங்க் அகர்வால் சேர்க்கப்படுவர் என தெரிகிறது.
மேலும் நீண்ட காலமாக ஓய்வில் உள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இந்த தொடரில் இடம் பிடிக்க அதிகவாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தற்போது உள்ள விக்கெட் கீப்பர் ரிஷாப் பந்த் போட்டிகளில் சரியாக ஜொலிக்கவில்லை.அதனால் ரிஷாப் பந்த் பதிலாக தோனி இடம்பெறுவர் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
சில நாள்களுக்கு முன் முன்னாள் கேப்டன் தோனி வலைபயிற்சியில் ஈடுபட்ட வீடியோ ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்