செஸ் ஒலிம்பியாட் 2022 : தமிழக வீரர் குகேஷ் மற்றும் நிகால் சரினி தங்கப்பதக்கம் வென்று சாதனை.! 

Default Image

தமிழக வீரர் குகேஷுக்கு தங்கப்பதக்கம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து,   நிகால் சரினுக்கும் தங்கப்பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளன. தற்போது ஒட்டுமொத்தமாக, செஸ் வீரர்களுக்கு அவர்கள் விளையாடிய விதம் அடிப்படையில் கணக்கிட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு விருது அறிவிக்கப்படும்.

அந்த வகையில், ஏற்கனவே தமிழக வீரர் குகேஷுக்கு தங்கப்பதக்கம் அறிவிக்கப்பட்டது. அதே போல இன்னோர் இந்திய வீரர் நிகால் சரினுக்கு தங்கப்பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெண்கல பதக்கம் வென்றுள்ளார். தமிழக வீராங்கனை வைஷாலி வெண்கலப்பதக்கமும், தானியா சச்தேவ், திவ்யா தேஷ்முக் ஆகியோருக்கு வெண்கல பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வீரர் அர்ஜுன் எரிகாசிக்கு வெள்ளிப்பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய வீரர்கள் தனி பிரிவில் 7 பதக்கங்களை வென்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்