சாய் சுதர்சன், ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி.. இந்தியா அபார வெற்றி..!

Published by
murugan

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று  ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி  முதலில் பேட்டிங் தேர்வு செய்து.  அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 27.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுத்தன. இதில் அதிகபட்சமாக டோனி டி ஜோர்ஜி 28 ரன்களும், ஆண்டிலே 33 ரன்களும் மட்டுமே எடுத்தனர்.

இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளையும், அவேஷ் கான் 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 1 விக்கெட்டை பறித்தனர். 117 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க வீரராக ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ருதுராஜ் கெய்க்வா 5 ரன்னில் விக்கெட்டைஇழந்தார்.

இதைத்தொடர்ந்து,  ஸ்ரேயாஸ் ஐயர்  களமிறங்கினார். பின்னர் சாய் சுதர்சன், ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். சிறப்பாக விளையாடிய இருவருமே அரைசதம் விளாசினார்கள். இதில் ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடித்த அடுத்த சில நிமிடங்களில் 52ரன்கள்  எடுத்து விக்கெட் இழந்தார்.

இறுதியாக இந்திய அணி 16 ஓவரில் 2 விக்கெட்டை  இழந்து  117 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் 55* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார்.  மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Recent Posts

17 வருட பகையை தீர்த்து கொண்ட ஆர்சிபி… சேப்பாக்கத்தில் சிஎஸ்கே படுதோல்வி.!

சென்னை : ஐபிஎல் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இவ்விரு…

2 hours ago

மியான்மர், தாய்லாந்தை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 150 ஆக உயர்வு.!

பாங்காக் : மியான்மர் நாட்டில் இன்று மதியம் வேளையில், 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 6.4 ரிக்டர்…

2 hours ago

CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!

சென்னை : சேப்பாக்கத்தில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணியும் மல்லுக்கட்டி வருகின்றது. இரு…

4 hours ago

மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான 8-வது போட்டி…

4 hours ago

CSK vs RCB : ஆர்சிபி-ஐ பழிதீர்க்குமா சென்னை.? டாஸ் வென்ற ருதுராஜ் பந்துவீச தேர்வு.!

சென்னை : ஐபிஎல் 2025-ன் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர்.…

6 hours ago

மியான்மரில் கட்டடங்கள், ரயில் நிலையத்தை மிரள வைத்த நிலநடுக்கம்.! நெஞ்சை பதறவைக்கும் கோரக் காட்சிகள்…

பாங்காக் : மியான்மரில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாடு கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட…

6 hours ago