தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி உள்ளது. நேற்று தென்னாப்பிரிக்கா – இந்திய அணி இடையேயான மூன்றாவது (கடைசி) டி20 போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பந்து வீச முடிவு செய்து.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே சுப்மன் கில் 12 ரன்களிலும் , அடுத்து வந்த திலக் வர்மா டக் அவுட் ஆகி விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் சூரியகுமார் யாதவ் இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். இதில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 41 பந்தில் 60 ரன்கள் எடுத்து விக்கெட் இழந்தார்.
பின்னர் வந்த ரிங்குசிங் வந்த வேகத்தில் 14 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழக்க தொடக்க வீரர் சூரியகுமார் யாதவ் 56 பந்தில் சதம் விளாசி அடுத்த பந்தே வில்லியம்ஸ் பந்தில் கேட்ச் அவுட்டானார். சூரியகுமார் யாதவ் 8 சிக்ஸர், 7 பவுண்டரி விளாசினார். இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 201 ரன்கள் எடுத்தனர்.
தென்னாப்பிரிக்கா அணியில் கேசவ் மகாராஜ், லிசாட் வில்லியம்ஸ் தலா 2 விக்கெட்டையும், தப்ரைஸ் ஷம்சி, நந்த்ரே பர்கர் தலா 1 விக்கெட்டையும் பறித்தனர். 202 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 13.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்து 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணியில் குல்தீப் 5 விக்கெட்டையும், ஜடேஜா 2 விக்கெட்டையும், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட்டையும் பறித்தனர்.
இந்த போட்டியில் சுழல் பந்துவீச்சாளர்கள் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் குறிப்பாக 2.5 ஓவரில் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டை குல்தீப் வீழ்த்தினார். அதே நேரத்தில் ஜடேஜா 3 ஓவரில் 25 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட்டை பறித்தார். மூன்று போட்டியில் கொண்டு t20 தொடரில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் முடிந்தது. முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் தொடர்:
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையே 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டி டிசம்பர் 19ஆம் தேதி செயின்ட் ஜார்ஜ் பூங்காவில் நடைபெற உள்ளது. பின்னர் இரு அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி பார்லில் டிசம்பர் 21ம் தேதி நடைபெறுகிறது.
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…
சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துவிட்டது. அதில் வழக்கம் போல புதிய இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன்…
ஜப்பான் : மியான்மர்-தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவின் அதிர்ச்சியிலிருந்து உலகம் இன்னும் மீளவில்லை. அதற்குள் ஜப்பான் ஒரு பெரிய…