3 விக்கெட்டுகளை பறிகொடுத்து இந்திய அணி திணறல்..!

Default Image

இந்தியா ,தென்னாபிரிக்கா அணிகளுக்கு  இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் கேப்டன் கோலி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் , ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே மயங்க் அகர்வால் 12 ரன்கள் எடுத்து வெளியேறினர்.  பின்னர் களமிறங்கிய புஜாரா ரன் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.
Image
இதைத்தொடர்ந்து அணியின் கேப்டன் விராட் கோலி களமிங்கிய உடனே இரண்டு பவுண்டரி அடித்து ரசிகரக்ளுக்கு நம்பிக்கை கொடுத்தார்.  ஆனால்  அடுத்த சில நிமிடங்களில் கோலி 12 ரன்களுடன் வெளியேறினார்.இதனால் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தார்.
தற்போது களத்தில் ரோகித் சர்மா , ரஹானே இருவரும் விளையாடி வருகின்றனர். ரோஹித் 38 ,ரஹானே 11 ரன்களுடன் விளையாடி வருகின்றனர். இந்திய அணி 23 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 71 ரன்கள் எடுத்துள்ளது.தென்னாபிரிக்கா அணியில்  ரபாடா 2 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்