நிதி திரட்ட இந்தியா ,பாகிஸ்தான் இடையே போட்டி – அக்தர்.!

Published by
murugan

கொரோனாநோயால்  இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுக்க மக்கள் வீடுகளில்  முடங்கி உள்ளனர்.இதனால் பலரின் வாழ்வாதாரம் முடங்கி உள்ளது. அவர்களுக்கு உதவுவதற்காக இந்தியா , பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கோரிக்கை வைத்துள்ளார்.

சோயிப் அக்தர்  கூறுகையில் , கொரோனா பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் நிதி திரட்ட  இந்தியா, பாகிஸ்தான் இடையே மூன்று போட்டிகள் கொண்ட தொடரை நடத்த வேண்டும். இந்த போட்டிகளின் முடிவு எதுவாக இருந்தாலும் இரு நாட்டினரும்  கவலைப்படமாட்டார்கள்.

விராட் கோலி  சதம் அடித்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். பாபர் அசாம் சதம் அடித்தால் நீங்கள் உற்சாகமடையுங்கள்.  இதன் மூலம் கிடைக்கும் வருவாயை இரு நாடுகளின் கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகளுக்கு பகிர்ந்து கொள்ளலாம் என கூறினார்.

மேலும்  ரசிகர்கள் இல்லாமல் மைதானத்தில் இந்த போட்டியை நடத்தலாம். இப்போது அனைவரும் வீட்டிலேயே இருப்பதால் டி.வி மூலம் அதிக பார்வையாளர்களை ஈர்க்க முடியும். ஆனால் தற்போது இந்த போட்டியை நடத்த முடியாது. தற்போது இருக்கும் நிலைமையில் இருந்து முன்னேற்றம் காணப்படும்போது இந்த தொடரை துபாய் போன்ற இடத்தில் நடத்தலாம் என அக்தர் கூறினார்.

 2007-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையே உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும்  மோதி வருகின்றன.

Published by
murugan

Recent Posts

“ஹிந்தி தான் பேசுவேன்” அடம்பிடித்த பெண் ஊழியர்! மகாராஷ்டிராவில் வெடித்த மொழி சர்ச்சை!

“ஹிந்தி தான் பேசுவேன்” அடம்பிடித்த பெண் ஊழியர்! மகாராஷ்டிராவில் வெடித்த மொழி சர்ச்சை!

மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு  மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…

9 minutes ago

இனி இப்படிதான்! ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு!! ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு.!

கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…

53 minutes ago

“வெங்கடேஷ் ஐயருக்குப் பதிலாக ரஹானே”… கேப்டனை மாற்றியது ஏன்? கேகேஆர் விளக்கம்.!

டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…

2 hours ago

பட்ஜெட்டில் முக்கிய ‘அடையாள’ மாற்றம் : தமிழுக்கு ‘ரூ’ முக்கியத்துவம்!

சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…

3 hours ago

அவரு கண்ணுல தெரியுது! 2027 உலகக்கோப்பைக்கு ஸ்கெட்ச் போட்ட ரோஹித்! ரிக்கி பாண்டிங் கணிப்பு!

டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…

4 hours ago

நாளை தமிழக பட்ஜெட் : ஆய்வறிக்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.!

சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…

5 hours ago