டோக்கியோ ஒலிம்பிக்:வில்வித்தையில் கால் இறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா…!

Published by
Edison

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் வில்வித்தை போட்டியில் தைபியினை தோற்கடித்து, இந்தியா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று 32-வது ஒலிம்பிக் போட்டியின் திறப்பு விழாவானது நடைபெற்றது.இந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பாக 127 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில்,டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தை கலப்பு அணிகளுக்கான காலிறுதி தகுதி சுற்று இன்று காலை நடைபெற்றது. இப்போட்டியில்,இந்தியாவின் தீபிகா குமாரி மற்றும் பிரவீன் ஜாதவ் ஆகியோர் சீன தைபியின் சிஹ்-சுன் டாங் மற்றும் சியா-என் ஆகியோருக்கு எதிராக 37 புள்ளிகள் பெற்றனர். ஆனால்,தைபே அணி 36 புள்ளிகள் மட்டுமே பெற்றது.இதனால்,இந்தியா 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.இதன் காரணமாக,ஒலிம்பிக்கில் தீபிகா – பிரவீன் ஜோடி தங்கப்பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீபிகா குமாரி – 9 வது இடம்:

முன்னதாக,ஒலிம்பிக்கில் தீபிகா தனது கணவர் அதானுவுடன் கூட்டு சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால்,அவர் பிரவீன் ஜாதவுடன் இணைந்துள்ளார்.தீபிகா குமாரி மற்றும் பிரவீன் ஜாதவ் இருவரும் இணைந்து போட்டியிடுவது இதுவே முதல் முறை.

இதற்கு முன்னர்,நேற்று நடைபெற்ற வில்வித்தை தகுதி சுற்றில் 663 புள்ளிகளை பெற்று தீபிகா குமாரி 9 வது இடத்தை பிடித்தார். இதனால்,அடுத்து நடைபெறும் மகளிர் தனிநபர் பிரிவில் பூட்டானின் கர்மாவை 32 சுற்றில் எதிர்கொள்ளவுள்ளார்.கடந்த ஆண்டு ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட தீபிகா குமாரி, தனிநபர் தகுதிப்பிரிவில் 20வது இடத்தை பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரவீன் ஜாதவ்:

ஒலிம்பிக் போட்டியின் ஆடவர் பிரிவில் இந்தியா சிறப்பாக பங்கேற்ற பிரவீன் ஜாதவ்,656 புள்ளிகளுடன் 31 வது இடத்தில் உள்ளார்.இவர் ஒலிம்பிக்கில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.

ஜாதவ் முதன்முதலில் பாங்காக்கில் நடந்த 2016 ஆசிய கோப்பை நிலை 1 இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார், அங்கு ஆண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதனையடுத்து,2005 ஆம் ஆண்டிற்கு பிறகு,2019 உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில்,இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய அணியில் ஒரு உறுப்பினராக இருந்தார்,அதில் அணி வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Edison

Recent Posts

”வென்றால் மாலை.., இல்லை என்றால் பாடை” – சீமானின் பரபரப்பு பேச்சு.!

சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…

24 minutes ago

க்ரீன் சிக்னல் கொடுத்த அர்ஜுன்.., 13 வருட வெளிநாட்டு காதலனை மணக்க போகும் அஞ்சனா.!

சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…

30 minutes ago

சென்னை அணிக்காக களமிறங்கிய ‘பேபி ஏபி’.! CSK-வில் பிரெவிஸ் இணைந்த காரணம் என்ன?

சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…

1 hour ago

மேகம் கருக்குது.., மழை வர பாக்குது.! வெயிலுக்கு இதமான மழை எங்கெல்லாம்?

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 hours ago

கமல் – சிம்புவின் மாஸ் நடனம்.., இணையத்தை கலக்கும் ‘ஜிங்குச்சா’ பாடல்!

சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…

3 hours ago

“தம்பி விஜய் அப்படிப்பட்ட ஆள் இல்லை.!” பாசமழை பொழியும் சீமான்!

சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…

4 hours ago