IND vs NZ : “இது தான் என்னோட ஆசை”…7 விக்கெட் எடுத்த வாஷிங்டன் சுந்தர் நெகிழ்ச்சி!

அஷ்வின் மற்றும் ஜடேஜாவுடன் இணைந்து விளையாடுவது குறித்து வாஷிங்டன் சுந்தர் பேசினார். அதைப்போல, 7 விக்கெட்  எடுத்தது தனக்கு எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது என்பது குறித்தும் பேசினார். 

Washington Sundar

புனே : இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது புனேவில் நடைபெற்று வரும் நிலையில், போட்டியில் நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸின் போது இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். இவருடைய அசத்தலான பந்துவீச்சின் காரணமாகத் தான் நியூசிலாந்து அணி 79.1 ஓவர்களில் 259 ரன்களில் சுருண்டது.

7 விக்கெட் எடுத்த வாஷிங்டன் சுந்தருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளும் குவிந்தது. இந்த நிலையில், போட்டி முடிந்த பிறகு பேசிய வாஷிங்டன் சுந்தர் அஷ்வின் மற்றும் ஜடேஜாவுடன் இணைந்து விளையாடுவது குறித்து வாஷிங்டன் சுந்தர் பேசினார். அதைப்போல, 7 விக்கெட் எடுத்தது தனக்கு எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது என்பது குறித்தும் பேசியிருக்கிறார்.

இது குறித்துப் பேசிய அவர் ” இந்த போட்டியில் 7 விக்கெட் எடுத்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த நேரத்தில், நான் மிகவும் பெருமைப்படக்கூடிய விஷயமாகப் பார்ப்பது என்னவென்றால் அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருடன் விளையாடியது தான். இவர்களைப் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் விளையாடியதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

அத்துடன் இவர்களுடன் விளையாடியதால் சில விஷயங்களையும் நான் கற்றுக்கொண்டேன். அஸ்வின் எனக்கும் மிகவும் நெருக்கமானவராக மாறிவிட்டார். பந்துவீச்சைப் பற்றி எதாவது அவரிடம் அணுகுமுறை கேட்டால் போதும் உடனடியாக என்னவென்று சொல்லி எனக்கு உதவி செய்வார். எனக்கு மட்டும் இல்லை, அணியில் இருக்கும் எல்லா பந்துவீச்சாளர்களுக்கும் உதவி செய்வார். இவர்களைப் போல, வீரர்களுடன் தொடர்ச்சியாக விளையாட ஆசை இருக்கிறது. விளையாடுவேன் என எதிர்பார்க்கிறேன்” எனவும் நெகிழ்ச்சியாகத் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்