மெஸ்ஸி இந்தியாவில் பிறந்திருந்தால்! சேவாக்கின் வேடிக்கை மீம் வைரல்.!

Default Image

அர்ஜென்டினாவின் உலகக்கோப்பை வெற்றிக்கு பின், மெஸ்ஸி குறித்து சேவாக் இன்ஸ்டாவில் பகிர்ந்த மீம் வைரலாகி வருகிறது.

உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த கால்பந்து உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி, பிரான்ஸை தோற்கடித்து கோப்பையைக் கைப்பற்றியது. இந்த போட்டியில் மெஸ்ஸி தன் பங்கிற்கு 2 கோல்களை அடித்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் எம்பாப்பேவிற்கு அடுத்தபடியாக 7 கோல் அடித்து மெஸ்ஸி 2-வது இடத்தில் இருக்கிறார், மேலும் அவர் இரண்டாவது முறையாக கோல்டன் பால் விருது வென்றுள்ளார்.

அர்ஜென்டினாவின் வெற்றிக்கு பின் உலகமே, அர்ஜென்டினா மற்றும் மெஸ்ஸிக்கு வாழ்த்துகளை பகிர்ந்து வந்த நிலையில் இந்தியாவின் முன்னாள் அதிரடி கிரிக்கெட்டர் வீரேந்தர் சேவாக், “மெஸ்ஸி இந்தியாவில் பிறந்திருந்தால்” என்ற கேப்ஷனுடன் இன்ஸ்டாவில் வேடிக்கையாக ஒரு மீம் பகிர்ந்தார். ரசிகர்களும் அதற்கு வேடிக்கையான பதிலளித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Virender Sehwag (@virendersehwag)

ஒரு ரசிகர் மெஸ்ஸி இந்தியாவில் பிறந்திருந்தால் அவர் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்திருப்பார் என்றும் இன்னொரு ரசிகர் மெஸ்ஸி, கால்பந்து ட்ரெயினிங் சென்டர் தொடங்கியிருப்பார் என்றும், இன்னொருவர் மெஸ்ஸி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பார் என்றும் மற்றொரு ரசிகர் மெஸ்ஸியின் பெயர் லியோனேந்திர மாசி என்று இருந்திருக்கும் என்றும் பதில் அளித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்