‘நாட்டிற்காக விளையாடியது பெருமையாக உள்ளது’ ! ஓய்வை அறிவித்தார் சுனில் சேத்ரி !!

Published by
அகில் R

சென்னை : இந்திய கால்பந்து அணியின் கேப்டனான சுனில் சேத்ரி தற்போது தனது சர்வேதச கால்பந்திலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

இந்திய கால்பந்து அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான சுனில் சேத்ரி அவரது கால் பந்து ஓய்வை குறித்து 10 நிமிட வீடியோவை அவரது X தளத்தில் பேசி வெளியிட்டு இருந்தார். அந்த வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் அவர் தனது சர்வேதச கால்பந்திலிருந்து உய்ர்வு பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கால் பந்து அணியின் கேப்டனான இவர் வருகிற குவைத் அணிக்கு எதிரான பிபா (FIFA) உலகக் கோப்பைக்காக விளையாடும் தகுதிப் போட்டி தான் தனது கடைசி சர்வேதச போட்டியாக இருக்கும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா நாட்டிற்காக விளையாடியது பெருமையாக உள்ளது எனவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2004-ம் ஆண்டு இந்திய அணிக்காக தனது முதல் சர்வதேச போட்டியை பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடினார்.

மேலும், அதே போட்டியில் தனது முதல் சர்வேதச கோலை பதிவு செய்ததார். தற்போது, சர்வேதச கால்பந்தில் அதிக கோல் அடுத்தவர்களின் பட்டியலில் கால் பந்து ஜாம்வபவன்களான ரொனால்டோ (128 கோல்கள்), மெஸ்ஸிக்கு (106 கோல்கள்) அடுத்தப்படியாக உலகத்தரத்தில் 94 கோல்கள் அடித்து 3-வது இடத்தில் சுனில் சேத்ரி இருந்து வருகிறார். இவர் தனது 20 ஆண்டுகால கால் பந்து பயணத்திற்கு பிறகு தற்போது அவர் தனது 39 வயதில் ஓய்வை அளித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக செயல்பட தொடங்கியதிலிருந்து இவர் இந்திய அணியை வேறு ஒரு கோணத்திற்கு கொண்டு சென்றார். கால் பந்தில் அசத்திய திறமையை கொண்ட சுனில் சேத்ரி 2011-ம் ஆண்டு அர்ஜுனா விருதையும், 2019-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். மேலும், அவரது கால்பந்து வாழ்க்கையில் ஏஐஎப்எப் (AIFF) ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

அதிரடி காட்டுமா ராஜஸ்தான்.? பேட்டிங் செய்ய களமிறங்கும் டெல்லி.! பிளேயிங் லெவன் இதோ…

டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…

9 minutes ago

“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!

சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…

49 minutes ago

தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?

டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…

2 hours ago

பாஜக தலைவர் பொறுப்பேற்பு…, அதிமுகவுடன் கூட்டணி ஆட்சியா? – நயினார் நாகேந்திரன் பதில்.!

சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…

2 hours ago

காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம்… பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு.!

சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…

3 hours ago

பதிலடிக்கு பதிலடி…சீனாவுக்கு 245% வரி விதித்த டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…

3 hours ago