இத்தனை வருடமாக காத்திருந்தது இந்த வருட ஐபிஎல்-லில் நடக்கும்.! கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியம் இந்த ஸ்டேடியத்தில் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் குத்தகைக்கு எடுத்து நிர்வகித்து வருகிறது.
  • தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக ரூபா குருநாத், செயலாளர் ஆர்.எஸ். ராமசாமி பதவியேற்றனர். திறக்கப்படாமல் இருக்கும் 3 கேலரிகள் பிரச்சனைக்கு தீர்வு காண தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிடம் தெரிவித்திருந்தனர்.

இந்தியாவின் பழமையான மைதானங்களில் ஒன்று தான் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியம். மாநில அரசுக்கு சொந்தமான இந்த ஸ்டேடியத்தில் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் குத்தகைக்கு எடுத்து நிர்வகித்து வருகிறது. குத்தகை காலம் அண்மையில் முடிந்து, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக ரூபா குருநாத், செயலாளர் ஆர்.எஸ். ராமசாமி பதவியேற்றனர். இந்நிலையில், குத்தகை காலத்தை நீடிக்கவும், திறக்கப்படாமல் இருக்கும் 3 கேலரிகள் பிரச்சனைக்கு தீர்வு காணவும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிடம் தெரிவித்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக சேப்பாக்கம் ஸ்டேடியத்தின் குத்தகை காலத்தை மேலும் 21 ஆண்டிக்கு நீடித்து தமிழக அரசு உத்தரவுட்டுள்ளது. இதையடுத்து ஐ,ஜே,கே உள்ளிட்ட 3 கேலரிகளை திறக்கும் பணியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தீவிரம் காட்டி வருகிறது.

இதைத்தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள ஐ,ஜே,கே என்ற 3 கேலரிகள் தற்போது வரை பயன்பாட்டில் இல்லை. இவற்றில் மொத்தம் 12000 பார்வையாளர்கள் அமரலாம். கடந்த 2012-ம் ஆண்டு முதல் இந்த பிரச்னை நீடித்து வருகிறது. சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தில் விதிகளின்படி ஸ்டேடியத்தில் உள்ள அந்த கேலரிகள் இடையிலான இடைவெளி 8 மீட்டர்களாக இருக்க வேண்டும். ஆனால் இடைவெளி 5.4 மீட்டர்களாக மட்டுமே உள்ளது. அதனால அந்த கேலரிகளுக்கு சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் அனுமதி வழங்கவில்லை. எம்.சி.சி க்ளப் மற்றும் கே. மாடம் ஆகியவற்றின் இடைவெளியை அதிகரிக்க ஸ்டேடியத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்தை இடித்துவிட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து சென்னை பெருநகர ஆணையத்தில் அனுமதி கேட்க உள்ளது.

அதில் அடுத்தமாதம் அதை இடித்துவிட்டு மார்ச் இறுதியில் ஐபிஎல் போட்டியின் போது அந்த கேலரிகளை திறக்கவிட முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மெட்ராஸ் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஆர். ரமேஷ் என்பவர் கூறுகையில், சென்னை மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏ-விடம் உடற்பயிற்சி கூடத்தை இடிக்க அனுமதி கேட்டு விண்ணப்பிக்க இருக்கின்றோம். பிப்ரவரி மாதம் இவைகளை இடிக்கப்பட்டு பிரச்சனைகள் தீர்க்கப்படும். பின்பு மார்ச் மாதம் நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு மூடப்பட்டு இருந்த கேலரிகள் ரசிகர்களுக்கு திறக்கப்படும், ஐபிஎல் போட்டிகள் மட்டுமில்லாமல் சர்வேதேச போட்டிகளுக்கும் தொடர்ந்து ரசிகர்களுக்காக திறக்கப்படும் என தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

CSK மேட்சுக்கு AK பேமிலி விசிட்! வைரலாகும் அஜித்குமார் வீடியோஸ்!

சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…

6 hours ago

CSK vs SRH : சென்னை படுதோல்வி..! CSK பிளே ஆப் கனவை தகர்த்த ஹைதராபாத்!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…

6 hours ago

“காஷ்மீர் குற்றவாளிகள் கனவில் கூட நினைக்காத தண்டனை தர வேண்டும்” ரஜினிகாந்த் ஆவேசம்!

சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

7 hours ago

CSK vs SRH : பந்துவீச்சில் மிரட்டிய ஹைதராபாத்! தடுமாறிய சென்னை ‘ஆல் அவுட்’! 155 டார்கெட்!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…

8 hours ago

அரைக்கம்பத்தில் தேசியக்கொடி! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது! – தமிழக அரசு.

சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ்  கடந்த…

9 hours ago

CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…

10 hours ago