இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இத்தொடரில், 5 போட்டிகளையும் வென்று நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி சாதனை படைத்தது. இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. பின்னர் குறிப்பாக இந்திய பேட்டிங்கில் கே.எல்.ராகுல், ரோகித் சர்மா, ஷ்ரேயஸ் ஐயர், கோலி ஆகியோரு சிறப்பான ஆட்டத்தை கொடுத்தனர். இதுபோன்று பந்து வீச்சில் பும்ரா, ஷ்ரதுல் தாகூர் எதிரணியை மிரட்டினர். இத்தொடர் முடிவடைந்த நிலையில் டி20 போட்டிக்கான தரவரிசைப்பட்டியலை ஐசிசி வெளியிட்டது. அதில் ராகுல் மற்றும் பும்ரா ஆகியோர் பட்டியலில் முன்னேற்றம் அடைந்தனர். இந்திய அணி கேப்டன் விராட் கோலி 9-வது இடத்திலேயே தொடர்கிறார்.
இதையடுத்து, பேட்டிங்கை பொறுத்தவரை, தரவரிசைப்பட்டியலில் 6-வது இடத்திலிருந்து கே.எல்.ராகுல் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 13-வது இடத்திலிருந்து ரோகித் சர்மா 10-வது இடத்திற்குள் நுழைந்துள்ளார். இதைத்தொடர்ந்து 70-வது இடத்திலிருந்து மனிஷ் பாண்டே 58-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 100-வது இடத்திற்கு மேல் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 55-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும், பவுலிங்கை பொறுத்தவரை, 37-வது இடத்தில் இருந்த ஜஸ்ப்ரிட் பும்ரா 11-வது இடத்தை பிடித்துள்ளார். 40-வது இடத்தில் இருந்த யுவேந்திர சாஹல் 30-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஷ்ரதுல் தாகூர் 91-வது இடத்திலிருந்து 57-வது இடத்திற்கும், சைனி 96-வது இடத்திலிருந்து 71-வது இடத்திற்கும், ஜடேஜா 76-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர். ஆனால், 14-வது இடத்தில் இருந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 22-வது இடத்திற்கு பின்னடைவு அடைந்துள்ளார். இந்நிலையில், இந்திய அணிக்கு நியூசிலாந்து டி20 தொடர் ஒரு முன்னேற்றத்தை கொடுத்துள்ளது என தெரியவருகிறது. மேலும், இந்திய மற்றும் நியூசிலாந்து அணிக்கான ஒரு நாள் தொடர் வரும் 5-ம் தேதி தொங்கவுள்ளது என குறிப்பிடப்படுகிறது.
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…