அடித்தது ஜாக்பாட்.! முன்னேறியது இந்தியா.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • இந்திய அணி நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இத்தொடரில், 5 போட்டிகளையும் வென்று நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி சாதனை படைத்தது.
  • இத்தொடர் முடிவடைந்த நிலையில் டி20 போட்டிக்கான தரவரிசைப்பட்டியலை ஐசிசி வெளியிட்டது. அதில் ராகுல், ரோகித் சர்மா மற்றும் பும்ரா ஆகியோர் பட்டியலில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இத்தொடரில், 5 போட்டிகளையும் வென்று நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி சாதனை படைத்தது. இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. பின்னர் குறிப்பாக இந்திய பேட்டிங்கில் கே.எல்.ராகுல், ரோகித் சர்மா, ஷ்ரேயஸ் ஐயர், கோலி ஆகியோரு சிறப்பான ஆட்டத்தை கொடுத்தனர். இதுபோன்று பந்து வீச்சில் பும்ரா, ஷ்ரதுல் தாகூர் எதிரணியை மிரட்டினர். இத்தொடர் முடிவடைந்த நிலையில் டி20 போட்டிக்கான தரவரிசைப்பட்டியலை ஐசிசி வெளியிட்டது. அதில் ராகுல் மற்றும் பும்ரா ஆகியோர் பட்டியலில் முன்னேற்றம் அடைந்தனர். இந்திய அணி கேப்டன் விராட் கோலி 9-வது இடத்திலேயே தொடர்கிறார்.

இதையடுத்து, பேட்டிங்கை பொறுத்தவரை, தரவரிசைப்பட்டியலில் 6-வது இடத்திலிருந்து கே.எல்.ராகுல் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 13-வது இடத்திலிருந்து ரோகித் சர்மா 10-வது இடத்திற்குள் நுழைந்துள்ளார். இதைத்தொடர்ந்து 70-வது இடத்திலிருந்து மனிஷ் பாண்டே 58-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 100-வது இடத்திற்கு மேல் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 55-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும், பவுலிங்கை பொறுத்தவரை, 37-வது இடத்தில் இருந்த ஜஸ்ப்ரிட் பும்ரா 11-வது இடத்தை பிடித்துள்ளார். 40-வது இடத்தில் இருந்த யுவேந்திர சாஹல் 30-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஷ்ரதுல் தாகூர் 91-வது இடத்திலிருந்து 57-வது இடத்திற்கும், சைனி 96-வது இடத்திலிருந்து 71-வது இடத்திற்கும், ஜடேஜா 76-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர். ஆனால், 14-வது இடத்தில் இருந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 22-வது இடத்திற்கு பின்னடைவு அடைந்துள்ளார். இந்நிலையில், இந்திய அணிக்கு நியூசிலாந்து டி20 தொடர் ஒரு முன்னேற்றத்தை கொடுத்துள்ளது என தெரியவருகிறது. மேலும், இந்திய மற்றும் நியூசிலாந்து அணிக்கான ஒரு நாள் தொடர் வரும் 5-ம் தேதி தொங்கவுள்ளது என குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

4 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

16 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

22 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

22 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

22 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

22 hours ago