விராட் கோலியின் சாதனையை வெல்லும் ஆற்றல் இவருக்கு உள்ளது – ரமீஸ் ராஜா

Default Image

கோலியின் சாதனையை பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமிற்கு வெல்லும்  திறன் உள்ளது என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா, இந்திய அணி கேப்டன் விராட் கோலியை குறித்த கருத்து ஒன்றை முன்வைத்துள்ளார். அதாவது, கோலியின் சாதனையை பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமிற்கு வெல்லும்  திறன் உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனால் பாபர் அசாம் தனது மனதை லேசாக வைத்துக்கொண்டு நேர்மறையாக சிந்துக்கும் படி அறிவுரை கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய ரமீஸ் ராஜா, கோலியின் சாதனையை வெல்லும் ஆற்றல் அவருக்கு உள்ளது என்றும் இழப்பதை பற்றி சிந்திக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார். ரன்கள் எடுப்பது, போட்டியில் வெல்வது குறித்து யோசித்தால் நீண்ட காலத்திற்கு ஒரு சிறந்த வீரராக இருக்க முடியும் என கூறினார். மேலும் பாபர் அசாமிற்கு வானமே எல்லை, ஊக்கமளிக்கும் மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய சூழலை அவர் பெறும் வரை, தனது திறனை வைத்து வாழ முடியாது எனவும் கூறியுள்ளார்.

இதையடுத்து கோலி நிறைய சாதனை செய்துள்ளார் என்றும் இந்திய நாட்டின் லெஜெண்ட் என்று தெரிவித்துள்ளார். தற்போது நேமையாக சொன்னால் எந்த ஒப்பிடும் என்னிடம் இல்லை. ஆனால் கடைசியாக அவர் இப்பவுள்ள இடத்தை நான் பெற விரும்புகிறேன் என பாபர் அசாம் கூறிருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்