இந்தியாவில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதன் ‘பி’ பிரிவு லீக் போட்டியில் மத்திய பிரதேசம் மற்றும் உ.பி அணிகள் இந்துாரில் மோதின. முதல் இன்னிங்சில் ம.பி அணி 230 ரன்கள் எடுத்தது, உ.பியை சேர்ந்த ரவி யாதவ், ம.பி அணியில் அறிமுகம் செய்யப்பட்டார். இவர், தனது முதல் ஓவரில் 3,4,5-வது பந்தில் ஆர்யன், அன்கித், சமீரை அவுட்டாக்கி, ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். உ.பி அணி முதல் இன்னிங்சில் 216 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இரண்டாவது நாள் முடிவில் ம.பி. அணி இரண்டாவது இன்னிங்சில் 105/3 ரன்கள் எடுத்து 119 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
இதையடுத்து முதல் தர அறிமுக போட்டியில் முதல் ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் பவுலர் என உலக சாதனை படைத்தார் ரவி யாதவ். இதற்கு முன் இந்தியாவின் ஸ்ரீநாத், சலில் அங்கோலா, அபிமன்யு மிதுன் உள்ளிட்ட 7 இந்திய வீரர்கள் அறிமுக போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினர். சர்வதேச அளவில் தென் ஆப்ரிக்காவின் ரிக்கி பிளிப், 1939-40ல் முதல் 3 போட்டியில் பவுலிங் செய்யவில்லை. 4-வது போட்டியில் முதன் முறையாக பந்து வீசிய ஓவரில் இதுபோல சாதித்தார். மற்றபடி, அறிமுக போட்டியில், முதல் ஓவரில் அசத்தியது ரவி யாதவ் மட்டும் தான் என குறிப்பிடப்படுகிறது.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…