பிரபல கால்பந்து ஜாம்பவான் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோவும் அவரது மனைவி ஜார்ஜினா ரோட்ரிகஸும் தங்கள் ஆண் குழந்தை உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.இது தொடர்பாக ரொனால்டோ தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:
“எங்கள் குழந்தையின் மரணத்தை ஆழ்ந்த சோகத்துடன் அறிவிக்கிறோம்.எந்தவொரு பெற்றோரும் உணரக்கூடிய மிகப்பெரிய வலி இது.எனினும்,எங்கள் பெண் குழந்தை பிறந்தது மட்டுமே இந்த தருணத்தை ஓரளவு நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வலிமை அளிக்கிறது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களால் வழங்கப்பட்ட அனைத்து பராமரிப்பு மற்றும் ஆதரவிற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.
இந்த கடினமான நேரத்தில் நாங்கள் பேரழிவிற்கு ஆளாகி தனிமையில் இருக்க விரும்புகிறோம்.எங்கள் பையன்,எங்கள் தேவதை.நாங்கள் எப்பொழுதும் உன்னை நேசிப்போம்”,என்று தெரிவித்துள்ளார்.
ரொனால்டோவுக்கும்,ஜார்ஜினா ரோட்ரிகஸும் கிறிஸ்டியானோ ஜூனியர்,மேடியோ என்ற இரு ஆண் குழந்தைகளும் மற்றும் ஈவா மற்றும் அலனா என்ற இரு பெண் குழந்தைகளும் என மொத்தம் நான்கு குழந்தைகள் உள்ளனர்.மேலும்,அவர் மனைவி மீண்டும் கற்பமானதையடுத்து,இரட்டை குழந்தை பிறக்கப்போவதை உறுதிப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில்,பெண் குழந்தை மட்டுமே உயிருடன் பிறந்தது என்றும் ஆண் குழந்தை உயிரிழந்து அந்த இழப்பை சமாளிக்கும் வலிமையை மட்டுமே அளித்துள்ளது என்றும் ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…
சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…
அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…
சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…
சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…