பெரும் சோகம்…பிரபல கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவின் ஆண் குழந்தை மரணம்!

Published by
Edison

பிரபல கால்பந்து ஜாம்பவான் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட்  அணியின் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோவும் அவரது மனைவி ஜார்ஜினா ரோட்ரிகஸும் தங்கள் ஆண் குழந்தை உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.இது தொடர்பாக ரொனால்டோ தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:

“எங்கள் குழந்தையின் மரணத்தை ஆழ்ந்த சோகத்துடன் அறிவிக்கிறோம்.எந்தவொரு பெற்றோரும் உணரக்கூடிய மிகப்பெரிய வலி இது.எனினும்,எங்கள் பெண் குழந்தை பிறந்தது மட்டுமே இந்த தருணத்தை ஓரளவு நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வலிமை அளிக்கிறது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களால் வழங்கப்பட்ட அனைத்து பராமரிப்பு மற்றும் ஆதரவிற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.

இந்த கடினமான நேரத்தில் நாங்கள் பேரழிவிற்கு ஆளாகி தனிமையில் இருக்க விரும்புகிறோம்.எங்கள் பையன்,எங்கள் தேவதை.நாங்கள் எப்பொழுதும் உன்னை நேசிப்போம்”,என்று தெரிவித்துள்ளார்.

ரொனால்டோவுக்கும்,ஜார்ஜினா ரோட்ரிகஸும் கிறிஸ்டியானோ ஜூனியர்,மேடியோ என்ற இரு ஆண் குழந்தைகளும் மற்றும்  ஈவா மற்றும் அலனா என்ற இரு பெண் குழந்தைகளும் என மொத்தம் நான்கு குழந்தைகள் உள்ளனர்.மேலும்,அவர் மனைவி மீண்டும் கற்பமானதையடுத்து,இரட்டை குழந்தை பிறக்கப்போவதை உறுதிப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில்,பெண் குழந்தை மட்டுமே உயிருடன் பிறந்தது என்றும் ஆண் குழந்தை உயிரிழந்து அந்த இழப்பை சமாளிக்கும் வலிமையை மட்டுமே அளித்துள்ளது என்றும் ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

 

Recent Posts

யார் அந்த தியாகி? “நொந்து போய் நூடுல்ஸ் ஆகிய அதிமுகவினர்” மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்! 

யார் அந்த தியாகி? “நொந்து போய் நூடுல்ஸ் ஆகிய அதிமுகவினர்” மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…

4 minutes ago

உலக வர்த்தகத்தையே ஆட்டம் காண வைத்த டிரம்ப்! கடும் சரிவில் இந்திய பங்குச்சந்தை!

மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…

1 hour ago

கே.என்.நேரு இல்லத்தில் ED ரெய்டு, சென்னை, திருச்சியில் தொடரும் தீவிர சோதனை!

திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…

2 hours ago

Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., அமலாக்கத்துறை ரெய்டு வரை…

சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…

3 hours ago

சுமார் 17 மணி நேர விவாதம்.., மாநிலங்களவையில் வக்ஃபு வாரிய திருத்த மசோதா சாதனை.!

டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…

3 hours ago

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

4 hours ago