கோமதி மாரிமுத்து நான்கு ஆண்டுகளுக்கு விளையாட தடை.. பறிக்கப்பட்ட தங்கப்பதக்கம்!

Published by
Surya

பிரபல ஓட்டப்பந்தய வீராங்கனையான கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அவர் 4 ஆண்டுகளுக்கு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது தங்கப்பதக்கமும் பறிக்கப்பட்டுள்ளது.

கோமதி மாரிமுத்து, 2019 ஆம் ஆண்டு நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் 800 மீட்டர் ஓட்டப்பந்தய பிரிவில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார். இந்நிலையில், அந்த போட்டியில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தினர் என புகார் அளிக்கப்பட்டது. முதற்கட்டமாக அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால், அவர் மேற்கொண்ட போட்டிகளில் விளையாட தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அடுத்தகட்ட சோதனையில் அவர் மாதிரிகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக, அவர் நான்கு ஆண்டுகளுக்கு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மார்ச் 18, 2019 முதல் மே 19, 2019 வரையிலான சாதனைகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த தங்கப்பதக்கமும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோமதி மாரிமுத்து கூறுகையில், இந்த தடையை எதிர்த்து நான் மேல்முறையீடு செய்ய உள்ளேன். எனக்கு மாநில அரசு உறுதியாக இருக்கு வேண்டும். நான் எந்த ஒரு ஊக்கமருந்தும் பயன்படுத்தவில்லை. மேலும், நான் அந்த போட்டியின்போது நான் அசைவ உணவு சாப்பிட்டேன். அதில் தடைசெய்யப்பட்ட பொருள் இருந்திருக்கலாம்” என கூறினார்.

Published by
Surya

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

5 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

5 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago