தங்கம் வென்றார் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா ..!! 85.97.மீ தூரம் ஈட்டி எறிந்து அசத்தல்!

Published by
அகில் R

நீரஜ் சோப்ரா: நடப்பு ஆண்டின் பாவோ நர்மி விளையாட்டுப் போட்டியானது துர்குவில் உள்ள பாவோ நர்மி ஸ்டேடியத்தில் இன்று (ஜூன்-18)செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட இந்தியாவை சேர்ந்த ‘தங்கமகன்’ நீரஜ் சோப்ரா தற்போது தங்கம் வென்றுள்ளார்.

இந்த ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா 85.97 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து அசத்தியிருக்கிறார். நடைபெற்ற இந்த ஈட்டி எறிதல் போட்டியின் முதல் சுற்றில் நீரஜ் 83.62 மீட்டர் தூரம் எறிந்து முன்னணியில் இருந்தார். ஆனால், பின்லாந்து நாட்டை சேர்ந்த ஹெலாண்டர் 83.96 மீட்டர் தூரம் எறிந்து நீரஜை விட தூரம் எறிந்து முன்னிலை பெற்றார்.

அதன் பிறகு, நடைபெற்ற மூன்றாவது சுற்றில் தான் நீரஜ் 85.97 மீட்டர் தூரம் அசத்தலாக ஈட்டியை எறிந்து மீண்டும் முன்னிலை பெற்றார். இதன் மூலம் தங்கப்பதக்கத்தை வென்று இந்திய நாட்டிற்கு பெருமையை தேடி தந்துள்ளார். நீரஜ் 5-வது முறையாக இந்த பாவோ நர்மி விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

அதே நேரம், கடந்த 2022-ம் ஆண்டின் பாவோ நர்மி விளையாட்டுப் போட்டியில் பின்லாந்தை சேர்ந்த ஒலிவர் ஹெலாண்டர் நீரஜை முந்தி தங்கப் பதக்கம் வென்றார் குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய தமிழக சுற்றுலா பயணிகள்.!

காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம்…

23 minutes ago

என்னை கொலை பண்ணிருவேன்னு மிரட்டுறாங்க! போலீசில் புகார் கொடுத்த கவுதம் கம்பீர்!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow)…

52 minutes ago

Live : பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் முதல் அரசியல் நிகழ்வுகள் வரை!

சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

1 hour ago

பயங்கரவாத தாக்குதல்…மொத்தம் 5 தீவிரவாதிகள், 3 பாகிஸ்தானியர்? விசாரணையில் வந்த முக்கிய தகவல்!

பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…

2 hours ago

மயோனைஸ் பிரியர்கள் ஷாக்… “ஓராண்டு தடை”! தமிழ்நாடு அரசு உத்தரவு!

சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…

3 hours ago

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்…தகுந்த பதிலடி அளிக்கப்படும்! ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம்…

3 hours ago