[Image Source:X/@CricCrazyJohns]
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் 5,000 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்திய வீராங்கனை பாருல் சவுத்ரி தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன்மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 14வது தங்கப் பதக்கம் இதுவாகும். 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆசிய விளையாட்டின் அனைத்து போட்டிகளும் ஹாங்சோவில் உள்ள 56 அரங்குகள் மற்றும் மைதானங்களில் நடந்து வருகிறது.
சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் உள்பட 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். இதில், இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 699 வீரர், வீராங்கனைகளை 39 விளையாட்டுகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். 40 வகையான விளையாட்டுகள் 61 பிரிவுகளில் நடந்து வரும் நிலையில், இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் 5,000 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்திய வீராங்கனை பாருல் சவுத்ரி தங்கம் பதக்கம் வென்றுள்ளார். ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான 5,000 மீ ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை பாருல் சவுத்ரி 15:14.75 நிமிடங்களில் இலக்கை எட்டி தங்கம் பதக்கம் வென்று அசத்தினார். ஸ்டீபிள் சேஸில் நேற்று பாருல் சவுத்ரி வெள்ளி பதக்கம் வென்ற நிலையில், இன்று 5,000 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
அதாவது, 3,000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் நேற்று இந்தியா 2 பதக்கங்களை வென்றது. அதன்படி, இந்தியாவின் பரூல் சவுத்ரி வெள்ளியும், ப்ரீத்தி லம்பா வெண்கலப் பதக்கமும் வென்றனர். இதில், பரூல் சவுத்ரி 9:27.63 நிமிடத்தில் இலக்கை எட்டி வெள்ளி பதக்கம் வென்றார். ப்ரீத்தி லம்பா 9:43.32 நிமிடத்தில் இலக்கை எட்டி வெண்கலம் வென்றார். எனவே, ஆசிய விளையாட்டு தொடரில் இதுவரை 14 தங்கம், 24 வெள்ளி, 26 வெண்கலம் என மொத்தம் 64 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…