பிரபல வீரர் கவுரவ் கில்லின் கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!

Published by
Surya

இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் சார்பில் இந்திய தேசிய ரேலி என்ற கார் பந்தயம் நடைபெற்று வருகிறது. இந்த பந்தயம், இந்தியா முழுவதும் ஆறு சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இந்த பந்தயத்தின் முதல் மற்றும் இரண்டாம் சுற்று, தமிழகத்தில் உள்ள சென்னை மற்றும் கோவையில் நடைபெற்று வந்தது.

இதனையடுத்து மூன்றாம் சுற்று போட்டியானது, ராஜஸ்தானில் உள்ள பார்மனில் நடைபெற்றது. இந்த போட்டியில் 53 அணிகள் பதிவு செய்தது. இந்நிலையில், தொடர்ந்து வெற்றிகளை சந்தித்து வந்த டெல்லியை சேர்ந்த பிரபல வீரான 37 வயதான கவுரவ் கில். அவரும் அந்த போட்டியில் கலந்துகொண்டார்.

இந்நிலையில் போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில், கில்லின் கார் சென்ற பொது விபத்தில் சிக்கியது. 145 கீ.மீ. வேகத்தில் சென்ற கார் வளைவில் திருபோது அங்கு வந்த மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.

Image result for கவுரவ் கில்

இதில் அந்த மோட்டார் சைக்கிலில் பயணித்த அந்த பகுதியை சேர்ந்த நரேந்திரா, அவரின் மனைவி புஷ்பா மற்றும் இவர்களில் மகள் ஜிஜேந்திரா ஆகியோர் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும், காரை ஓட்டிய கவுரவ் கில்லுக்கு விலா பகுதியில் காயம் அடைந்தார். அவரை மீட்டு, அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த பந்தயம் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்து இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ்ன் தலைவர் பிரித்விராஜ் கூறுகையில்; “கார்பந்தயம் காரணமாக இந்த பகுதியை எங்களது பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து இருந்தோம். இந்த சாலை தடை செய்யப்பட்டிருப்பதால், யாரும் வர வேண்டாம் என கடந்த 15 நாட்களாக கூறி வந்தோம். மோட்டார் சைக்கிளில் வந்த நரேந்திரா, எங்களது பாதுகாப்பு ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்ததுடன், இரும்பு தடுப்பை உடைத்துக் கொண்டு பந்தய பாதைக்குள் நுழைந்ததால் விபத்தில் சிக்கி இறந்து விட்டார்.

அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் துரதிர்ஷ்டவசமாக இந்த விபத்து நிகழ்ந்து விட்டது. கவுரவ் கில் முடிந்த வரை பிரேக் போட்டு காரை நிறுத்த முயற்சித்தார். ஆனால் அதிவேகம் காரணமாக ஒன்றும் செய்ய இயலாமல் போய் விட்டது. உயிரிழந்த குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார். கவுரவ் கில், சமீபத்தில் இந்திய அரசிடம் அர்ஜுனா விருதை பெற்றார். மேலும், இந்த விருதைப்பெற்ற முதல் கார் பந்தைய வீரர் இவரே ஆவர்.

Published by
Surya

Recent Posts

“அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?

சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…

16 mins ago

“நிரந்தரத் தலைவர்” கமல்ஹாசன்.! ம.நீ.ம கட்சிக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்….

சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

36 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்- முத்து மீனாவை கொல்ல துடிக்கும் சிட்டி.. விறுவிறுப்பான காட்சிகள்..!

சென்னை -சிறகடிக்க  ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து  தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…

39 mins ago

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இலங்கை தேர்தல்! மும்முனை போட்டியில் வெல்லப்போவது யார்?

இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…

47 mins ago

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…

1 hour ago

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

2 hours ago