அஸ்வினின் பழைய பேட்டி முதல் உலக செஸ் சாம்பியன்ஷிப் வரை! சூடான விளையாட்டு செய்திகள்!

Published by
அகில் R

சென்னை : இன்றைய நாளின் (17-08-2024) முக்கிய விளையாட்டு செய்திகளில், அஸ்வின் பேட்டி முதல் சிங்கப்பூரில் நடைபெற இருக்கும் உலக செஸ் போட்டி வரையிலான செய்தி தொகுப்பைப் பற்றி பார்க்கலாம்.

ஓய்வை குறித்து பேசிய அஸ்வினின் பழைய பேட்டி வைரல்!

அஸ்வின் ஒரு பழைய பேட்டியில் தனது ஓய்வைக் குறித்து பேசி இருப்பார் அது தற்போது வைரலாகி வருகிறது. அதில், “நான் அனில் கும்ப்ளேவின் தீவிரமான ரசிகன். அதனால் அவரது சாதனையான 619 விக்கெட்டுகளை நான் முறியடிக்க மாட்டேன். நான் டெஸ்ட் போட்டியில் 618 விக்கெட்டுகள் எடுத்த  உடனே எனது ஓய்வை அறிவித்துவிடுவேன். அது தான் எனது கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும்” எனவும் கூறி இருந்தார்.  இவர் பேசிய இந்த வீடியோ தற்போது சமூகத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஏற்பட்ட புதிய சிக்கல்!

பஞ்சாப் அணியின் உரிமையாளர்களுள் ஒருவரான ப்ரீதி சிந்தா அந்த அணியின் சக உரிமையாளரான மோஹித் பும்ரான் மீது உள்ள வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு இடைக்கால வழிகாட்டுதல்களைக் கோரி ஹரியானா உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு வரும் ஆகஸ்ட்-20 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

லம்போர்கினியில் ரோஹித் சர்மா .. வைரலாகும் வீடியோ!

இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கார்களை விரும்புபவர் என்பது நமக்குத் தெரியும். அவர் தனது ஆடம்பரமான லம்போர்கினியில் தெற்கு மும்பையில் கார் ஒட்டி செல்லும் காட்சியை அவரது ரசிகர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வரலாகப் பரவி வருகிறது.

மகளீர் டி20 உலகக்கோப்பை தொடர்!

சர்வேதச கிரிக்கெட் கவுன்சில், அடுத்ததாக மகளீர் டி20 கோப்பைக்கு தங்களது திட்டங்களைத் திட்டமிட்டு வருகிறது. இந்த தொடரை இந்தியாவில் நடத்த பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மறுத்த நிலையில், அடுத்த கட்டமாக ஐக்கிய அரபு நாட்டில் நடத்துவது குறித்த ஆலோசனையிலிருந்து வருவதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏலத்தில் விற்கப்படாமல் போன ப்ரோ கபடி வீரர்!

இந்த ஆண்டுக்கான ப்ரோ கபடி லீக் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் அதற்கான ஏலம் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் நட்சத்திர ரைடரான ராகுல் சௌத்ரியை ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை. இவரைக் கடந்த ஆண்டு நடைபெற்ற ப்ரோ கபடி லீக்கிலும் எந்த ஆனாலும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலக செஸ் சாம்பியன்ஷிப் .!

உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியானது இந்த ஆண்டு நவம்பர் 23 முதல் டிசம்பர் 15 வரை நடைபெற உள்ளது. இதில் தமிழக இளம் கிராண்ட்மாஸ்டர் குகேஷ், சீனாவின் க்ராண்ட்மாஸ்டரான டிங் லிரினை எதிர்த்து விளையாடவுள்ளார். இந்த போட்டியானது சிங்கப்பூரில் உள்ள ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில் நடைபெற உள்ளது. மேலும், 138 வருடங்களுக்குப் பிறகு ஆசியக் கண்டத்திலிருந்து 2 செஸ் வீரர்கள் போட்டியிட உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

வெயிலுக்கு இதமாய் வரும் மழை.! இந்த மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் கனமழை சில மாவட்டங்களில் பெய்ய…

56 minutes ago

டாஸ்மாக் விவகாரம்: தமிழ்நாடு அரசின் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்க.! அமலாக்கத்துறை பதில் மனு…

சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மார்ச் 6ம் தேதி முதல் 8ம்…

1 hour ago

“திருச்சியை தலைநகராக மாத்துங்க”! நயினார் கோரிக்கையை அன்போடு பரிசீலிப்போம்- முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில்,…

1 hour ago

முடிஞ்சா மோதி பாருங்க!! ரசிகர்களால் ரோஹித்துக்கு புதிய சாதனை.! என்ன தெரியுமா?

மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…

2 hours ago

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து! 33 பேர் காயம்..மீட்பு பணி தீவிரம்!

மலேசியா :  தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் (Putra Heights), செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ்…

3 hours ago

அச்சுறுத்தும் தெருநாய்க்கடி: “ஆபத்தான நாய்களை கருணைக் கொலை செய்யலாம்” – அன்புமணி

சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…

3 hours ago