அஸ்வினின் பழைய பேட்டி முதல் உலக செஸ் சாம்பியன்ஷிப் வரை! சூடான விளையாட்டு செய்திகள்!

Published by
அகில் R

சென்னை : இன்றைய நாளின் (17-08-2024) முக்கிய விளையாட்டு செய்திகளில், அஸ்வின் பேட்டி முதல் சிங்கப்பூரில் நடைபெற இருக்கும் உலக செஸ் போட்டி வரையிலான செய்தி தொகுப்பைப் பற்றி பார்க்கலாம்.

ஓய்வை குறித்து பேசிய அஸ்வினின் பழைய பேட்டி வைரல்!

அஸ்வின் ஒரு பழைய பேட்டியில் தனது ஓய்வைக் குறித்து பேசி இருப்பார் அது தற்போது வைரலாகி வருகிறது. அதில், “நான் அனில் கும்ப்ளேவின் தீவிரமான ரசிகன். அதனால் அவரது சாதனையான 619 விக்கெட்டுகளை நான் முறியடிக்க மாட்டேன். நான் டெஸ்ட் போட்டியில் 618 விக்கெட்டுகள் எடுத்த  உடனே எனது ஓய்வை அறிவித்துவிடுவேன். அது தான் எனது கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும்” எனவும் கூறி இருந்தார்.  இவர் பேசிய இந்த வீடியோ தற்போது சமூகத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஏற்பட்ட புதிய சிக்கல்!

பஞ்சாப் அணியின் உரிமையாளர்களுள் ஒருவரான ப்ரீதி சிந்தா அந்த அணியின் சக உரிமையாளரான மோஹித் பும்ரான் மீது உள்ள வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு இடைக்கால வழிகாட்டுதல்களைக் கோரி ஹரியானா உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு வரும் ஆகஸ்ட்-20 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

லம்போர்கினியில் ரோஹித் சர்மா .. வைரலாகும் வீடியோ!

இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கார்களை விரும்புபவர் என்பது நமக்குத் தெரியும். அவர் தனது ஆடம்பரமான லம்போர்கினியில் தெற்கு மும்பையில் கார் ஒட்டி செல்லும் காட்சியை அவரது ரசிகர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வரலாகப் பரவி வருகிறது.

மகளீர் டி20 உலகக்கோப்பை தொடர்!

சர்வேதச கிரிக்கெட் கவுன்சில், அடுத்ததாக மகளீர் டி20 கோப்பைக்கு தங்களது திட்டங்களைத் திட்டமிட்டு வருகிறது. இந்த தொடரை இந்தியாவில் நடத்த பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மறுத்த நிலையில், அடுத்த கட்டமாக ஐக்கிய அரபு நாட்டில் நடத்துவது குறித்த ஆலோசனையிலிருந்து வருவதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏலத்தில் விற்கப்படாமல் போன ப்ரோ கபடி வீரர்!

இந்த ஆண்டுக்கான ப்ரோ கபடி லீக் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் அதற்கான ஏலம் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் நட்சத்திர ரைடரான ராகுல் சௌத்ரியை ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை. இவரைக் கடந்த ஆண்டு நடைபெற்ற ப்ரோ கபடி லீக்கிலும் எந்த ஆனாலும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலக செஸ் சாம்பியன்ஷிப் .!

உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியானது இந்த ஆண்டு நவம்பர் 23 முதல் டிசம்பர் 15 வரை நடைபெற உள்ளது. இதில் தமிழக இளம் கிராண்ட்மாஸ்டர் குகேஷ், சீனாவின் க்ராண்ட்மாஸ்டரான டிங் லிரினை எதிர்த்து விளையாடவுள்ளார். இந்த போட்டியானது சிங்கப்பூரில் உள்ள ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில் நடைபெற உள்ளது. மேலும், 138 வருடங்களுக்குப் பிறகு ஆசியக் கண்டத்திலிருந்து 2 செஸ் வீரர்கள் போட்டியிட உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

31 mins ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

39 mins ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

48 mins ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

56 mins ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

1 hour ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

17 hours ago