2011 ஆம் நடந்த இந்தியா-இலங்கை இறுதிப்போட்டி “மேட்ச் பிக்சிங்”.. திடீரென சர்ச்சையை கிளப்பிய முன்னாள் அமைச்சர்!

Published by
Surya

2011 ஆம் ஆண்டு நடந்த இந்தியா-இலங்கை இடையான உலகக்கோப்பை இறுதிப்போட்டி, “மேட்ச் பிக்சிங்” செய்யப்பட்டது என முன்னாள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்தா அலுத்காமகே தெரிவித்தார்.

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-இலங்கை இடையே 50 ஓவர் உலகக்கோப்பை இறுதி போட்டி, இந்தியாவில், மும்பை வான்கடே மைதானத்தி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி, ஜெயவர்தனேவின் அபாரமான சதத்தால் 274 ரன்கள் குவித்தது. 275 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

இந்திய அணி, 48 ஆம் ஓவரில் தோனி அடித்த சிக்ஸர் மூலம், இந்தியா அணி வற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக, கம்பிர் 97 ரன்களும், இந்திய அணியின் கேப்டன் தோனி 91 ரன்களும்
எடுத்தனர். மேலும், 28 ஆண்டுகள் கழித்து இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.

Sri Lankan Sports Ministry to Investigate 2011 World Cup Final ...

இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு நடந்த இறுதிப்போட்டி, “மேட்ச் பிக்சிங்” செய்யப்பட்டது என முன்னாள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்தா அலுத்காமகே தெரிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், 2011 உலக கோப்பை இறுதி போட்டி, ஃபிக்ஸிங் செய்யப்பட்டது. நான் இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும்போது நடந்த சம்பவம் இது. கிரிக்கெட் வீரர்களை இந்த விவகாரத்தில் உள்ளே இழுக்க நான் விரும்பவில்லை. குறிப்பிட்ட சில குழுக்கள் இந்த மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இந்த குற்றசாற்று அபாண்டமானது என இலங்கை அணியின் முன்னாள் கேப்டனான ஜெயவர்தனே தெரிவித்தார். இதுகுறித்து அவரின் ட்விட்டரில் ஒரு பதிவை பதிவிட்டார். அதில் அவர், இலங்கையில் தேர்தல் வரப்போகிறது அல்லவா? அதனால்தான் சர்க்கஸை தொடங்கிவிட்டார்கள்.

அதுமட்டுமின்றி, பிக்ஸிங்கில் ஈடுபட்ட வீரர்கள் பெயர் மற்றும் ஆதாரத்தை வெளியிடுங்கள் எனஜெயவர்தனே தெரிவித்தார். மேலும், ஜெயவர்தனே அந்த போட்டியில் 103 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

Published by
Surya

Recent Posts

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…

38 minutes ago

பட்டையை கிளப்புமா ரெட்ரோ! முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்யுமா?

சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…

1 hour ago

சுற்றி சுற்றி அடித்த சுட்டி குழந்தை! பஞ்சாப் அணிக்கு சென்னை வைத்த டார்கெட்!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

2 hours ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

4 hours ago

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

5 hours ago

வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

5 hours ago