Former Tennis players Leander Paes and Vijay Amritraj. (File photo)
ஆடவர் இரட்டையர் அல்லது கலப்பு இரட்டையர் பிரிவில் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற இந்திய முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் மற்றும் மற்றொரு முன்னாள் டென்னிஸ் வீரரான விஜய் அமிர்தராஜ் ஆகியோர் சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமுக்கு (Tennis Hall of Fame) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமுக்கு ஆசியாவிலேயே முதல்முறையாக இந்திய வீரர்கள் தேர்வாகியுள்ளனர். அமெரிக்காவின் நியூபோர்ட், ரோட் தீவில் உள்ள ஹால், 1955ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இது டென்னிஸ் விளையாட்டு வீரர்கள் மற்றும் பிற பங்களிப்பாளர்களை கவுரவித்து வருகிறது.
அதன்படி, பங்களிப்பாளர் பிரிவில் அமிர்தராஜியும், பிளேயர் பிரிவில் லியாண்டர் பயஸ்-யும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இருவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் இந்தியாவின் முதல் உறுப்பினர்கள் ஆவார். சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமில் இந்தியா பிரதிநிதித்துவப்படுத்தப்படும் 28 வது நாடு ஆகும்.
இரண்டு கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்ற சீன வீராங்கனையான லீ நா, கடந்த 2019ல் சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்ட முதல் ஆசிய உறுப்பினரானார். தற்போது, இந்திய முன்னாள் டென்னிஸ் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். லியாண்டர் பயஸ் கூறியதாவது, சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமில் இடம் பெறுவது எனக்கு மட்டுமல்ல, இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தமானது என்று கூறினார்.
இரட்டையர் பிரிவில் 8 பெரிய சாம்பியன்ஷிப்களையும், கலப்பு பிரிவில் 10 சாம்பியன்ஷிப்களையும் வென்றுள்ள லியாண்டர் பயஸ், டென்னிஸ் வரலாற்றில் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் விளையாடிய மூன்று பேரில் ஒருவராக உள்ளார். இதுபோன்று கடந்த 1970கள் மற்றும் 1980களில் ஒரு தொழில்முறை வீரராக இருந்த அமிர்தராஜ், விளையாட்டு வாழ்க்கைக்குப் பிறகு, டென்னிஸ் வர்ணனையாளராக உள்ளார்.
டெல்லி : ஆசியக் கோப்பையில் இருந்து இந்தியா விலகுவதாக வெளியான செய்திகளை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அடுத்த…
டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என…
சென்னை : மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.…
தூத்துக்குடி மாவட்டத்தில், காருக்குள் கருகிய நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி…
சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…