சதம் விளாசிய சஞ்சு சாம்சன்! புகழ்ந்து தள்ளிய கெளதம் கம்பீர்!

Published by
பால முருகன்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் சதம் விளாசி 108 ரன்கள் எடுத்தார். இது தான் அவர் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட்டில் அடித்த முதல் சதமும் கூட. நேற்று அசத்தலாக விளையாடி தன்னுடைய முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்த சஞ்சு சாம்சனை பல கிரிக்கெட் வீரர்களும் பாராட்டி பேசி வருகிறார்கள்.

அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் சமீபத்தில் சஞ்சு சாம்சன் அடித்த சதம் பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” சஞ்சு சாம்சனுக்கு நிறைய திறமை இருக்கிறது. இது ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து அவர் விளையாடி வருவதை பார்த்தாலே தெரியும். அந்த அளவுக்கு அவர் நல்ல ஒரு கிரிக்கெட் வீரர். அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடித்த அரைசதம் என்னை வெகுவாக கவர்ந்தது.

ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் பேட்டர் சச்சின் இல்லை.! வேறு யார் தெரியுமா.?

அந்த ஒரு நாள் போட்டியில் அவர் அடித்த சதம் தேர்வுக்குழுவையும் வியப்பில் ஆழ்த்தி அடுத்ததாக இந்தியா விளையாடும் போட்டியில் அணியில் சேர்க்கவேண்டும் என்ற அழுத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பொதுவாகவே சஞ்சு சாம்சன் என்றால் அவர் விளையாடிய ஐபிஎல் போட்டிகளை வைத்து தான் பேசுவார்கள். ஆனால், தற்போது சதம் விளாசி சர்வேதச கிரிக்கெட்டிலும் தான் ஒரு சிறந்த வீரர் என்பதனை நிரூபித்துள்ளார்” எனவும் கெளதம் கம்பீர் பாராட்டி பேசியுள்ளார்.

மேலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணி அதிரடியாக விளையாடி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் குவித்தது. 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 45.5 ஓவர்களில் தங்களுடைய 10 விக்கெட்களையும் இழந்து 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 78 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்று தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்த ஒரு நாள் தொடரை கைப்பற்றி கோப்பையை வென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent Posts

ஐபிஎல் 2025 சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதுதான்? தோனிக்கு இடமிருக்கா?

டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…

2 minutes ago

“வேளாண் பட்ஜெட் பெயரில் பொய், புரட்டு” – அண்ணாமலை கடும் விமர்சனம்.!

சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…

2 hours ago

“ஒருவித அழுத்தமான சூழல்., ஆனாலும்., ” சுனிதா வில்லியம்ஸ் மீட்பு குறித்து நாசா கருத்து!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர்  ஜூன் மாதம் முதல் சர்வதேச…

2 hours ago

“மொழிகளைத் தாண்டி திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் உதவியாக உள்ளது” – பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி.!

சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…

3 hours ago

தவெக திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் சஜி காலமானார் – விஜய் இரங்கல்.!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…

4 hours ago

எப்படி கண்ணா இது? சிம்பு குறித்து பேசிய ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…

5 hours ago